மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – மகரம்
மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)
உடல்நலம் நன்றாக இருக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும்.
ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். பயிர்த் தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சினிமா, சங்கீதம் பலன் தராது. பங்குச் சந்தை நஷ்டம் தரும். காதல் விவகாரத்தில் குழப்பம் உண்டாகும். பதவி உயர்வு தாமதமாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும்.
சிலருக்கு பதவிகள் பறிபோகும். மதிப்பு, செல்வாக்கு குறையும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 15, 16, 17
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)