மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – கன்னி
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)
உடல்நலம் நன்றாக இருக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பு, செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் விலகிச் செல்வர். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது.
ஏற்றுமதி இறக்குமதி தொழில் நன்மை தராது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். ஒப்பந்தக்காரர்களுக்கு சிரமம் ஏற்படும். சில கடன்கள் தொல்லை தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றமடையும்.
பயிர்த் தொழில் நன்மை தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நன்மை தரும். சிலர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவர். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபம் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும்.
சந்திராஷ்டமம் : 20, 21 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
நன்மை தரும் நாட்கள்: 16, 17, 19
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)