ரஜினியை வைத்துப் பிழைப்பு நடத்த கண்டதையும் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்! – நடிகை லதா

சென்னை: ரஜினியை ராமாவரம் தோட்டத்தில் வைத்து எம்.ஜி.ஆர். மிரட்டினார் என்பதெல்லாம் முழுக் கட்டுக்கதை என்று நடிகை லதா கூறியுள்ளார். எண்பதுகளின் ஆரம்பத்தில் நடிகை லதாவை ரஜினி காதலித்தார் என்றும், இதற்காக எம்ஜிஆர் ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்து ரஜினியை மிரட்டினார், தாக்கினார் என்றெல்லாம் தொடர்ந்து சிலர் எழுதியும் பேசியும் வருகிறார்கள். குறிப்பாக ரஜினிகாந்த் அரசியலில் பெரும் சக்தியாக உருவெடுத்துவரும் இந்த நேரத்தில் இதையே திரும்பத் திரும்ப சிலர் பேசி வருகின்றனர். இதுகுறித்து ஒரு தனியார் தொலைக்காட்சியும் நடிகை லதாவிடம்
 

ரஜினியை வைத்துப் பிழைப்பு நடத்த கண்டதையும் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்! – நடிகை லதா

சென்னை: ரஜினியை ராமாவரம் தோட்டத்தில் வைத்து எம்.ஜி.ஆர். மிரட்டினார் என்பதெல்லாம் முழுக் கட்டுக்கதை என்று நடிகை லதா கூறியுள்ளார்.

எண்பதுகளின் ஆரம்பத்தில் நடிகை லதாவை ரஜினி காதலித்தார் என்றும், இதற்காக எம்ஜிஆர் ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்து ரஜினியை மிரட்டினார், தாக்கினார் என்றெல்லாம் தொடர்ந்து சிலர் எழுதியும் பேசியும் வருகிறார்கள். குறிப்பாக ரஜினிகாந்த் அரசியலில் பெரும் சக்தியாக உருவெடுத்துவரும் இந்த நேரத்தில் இதையே திரும்பத் திரும்ப சிலர் பேசி வருகின்றனர்.

இதுகுறித்து ஒரு தனியார் தொலைக்காட்சியும் நடிகை லதாவிடம் கேட்டது. அதற்கு பதிலளித்த லதா, “இவை எல்லாமே கட்டுக் கதை,” என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தவிர, நான் பிற நடிகர்களுடனும் நடித்துள்ளேன். ஆனால் எங்கு சென்றாலும் எனக்கு எம்.ஜி.ஆர். லதா என்று முத்திரை குத்திவிட்டார்கள். அதை நான் பெருமையாகவே நினைக்கிறேன். எத்தனை பேருக்கு கிடைக்கும் அந்த பெருமை?

கமலும், ரஜினியும் எனக்கு நெருக்கமான நண்பர்கள்தான். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் எம்.ஜி.ஆரை போன்று ஒருவர் இருந்ததும் இல்லை, இனி வரப் போவதும் இல்லை.

உங்களை ரஜினி காதலித்ததாகவும், அது தெரிந்ததால் எம்ஜிஆர் கோபப்பட்டு ரஜினியை ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்து தாக்கியதாகவும் சொல்கிறார்களே, என்று கேட்டதற்கு, “பாவம்.. அவரை பற்றி வேறு எதுவுமே சொல்ல முடியாது என்பதால் இப்படி கட்டுக்கதை பரப்புகிறார்கள். ரஜினி பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி சொல்கிறார்கள். அப்படி எதுவுமே நடக்கவில்லை. எனவே அது பற்றி பேச விரும்பவில்லை.

ரஜினிகாந்த் மிக நல்ல மனிதர். எளிமையானவர். புகழின் உச்சியில் இருந்தால் கூட முதல் படத்தில் நடித்தபோது எப்படி இருந்தாரோ தற்போதும் அதே போன்று எளிமையாக உள்ளார். எனக்கு நல்ல குடும்ப நண்பர். அவர் வீட்டில் விசேஷம் என்றால் லதா ரஜினிகாந்த் என்னை அழைப்பார். நானும் போவேன். என் வீட்டில் விசேஷம் என்றால் அவர்கள் வருவார்கள் என்று லதா தெரிவித்தார். எனக்கு கார்த்திக், ஸ்ரீனிவாஸ் என்று இரண்டு மகன்கள். ஸ்ரீனிவாஸுக்கு ரஜினியை மிகவும் பிடிக்கும்.

இங்கே ரஜினியை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள். அதனால்தான் அவரையும் என்னையும் சேர்த்துப் பேசுகிறார்கள். எம்ஜிஆருக்கு ரஜினியை மிகவும் பிடிக்கும். அவர் மீது அக்கறை கொண்டவர். சத்யா மூவீஸ் பேனரில் தொடர்ந்து ரஜினியை நடிக்க வைத்தவர். அப்படிப்பட்டவர் ரஜினியைத் தாக்கினார் என்பது எத்தனை பெரிய அவதூறு. நடக்காத ஒன்றை இத்தனை ஆண்டுகளாகக் கூறிவரும் மீடியா இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்,” என்றார்.

 

From around the web