செல்வ வளத்தை அள்ளித் தரும் மூன்றாம் பிறை தரிசனம் ..!
அமாவாசை அடுத்த மூன்றாவது நாளான துவிதியை திதியில் வானில் மேற்கு திசையில் தங்கக் கம்பியில் செய்த மோதிரம் போல் அழகாகவும், பிரகாசமாகவும் காட்சி தரும் பிறை தரிசனமே மூன்றாம் பிறை தரிசனம் ஆகும்.
முற்பிறவி பாவத்தைப் போக்கும் இந்த மூன்றாம் பிறை வானத்தில் சிறிது நேரமே மாலை 6.30 மணியிலிருந்து 7.30 மணி வரை மட்டுமே தெரியும்.
மூன்றாம் பிறையை தொடர்ந்து மூன்று முறை தரிசனம் செய்த மூர்க்கனும் கூட அறிவு பெறுவான் என்பது முது மொழி.
நான்கு பிறைகள் தொடர்ந்து தரிசித்திட நம்வினைகள் அனைத்தும் நாசமாகும்.
ஐந்து பிறைகள் தொடர்ந்து தரிசித்திட ஆண்டியும் அரசயோகம் பெற முடியும்.
ஆறு பிறைகள் தொடர்ந்து தரிசித்திட கல்யாணம் கைகூடும்.
ஏழு பிறைகள் தொடர்ந்து தரிசித்திட எப்பேர்ப்பட்ட கடன்சுமையும் தீரும்.
பத்து பிறைகள் தொடர்ந்து தரிசனம் செய்திட பாரில் புகழ் ஓங்கும்.
ஒரு வருடம் முழுவதும் தொடர்ந்து பிறை தரிசனம் செய்திட வம்சம் விருத்தியாகும்.
மூன்றாம் பிறை தரிசனம் தொடர்ந்து செய்திட அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும் கேட்ட வரம் கிடைக்கும். செல்வமும் சந்தோஷமும் வாசல் தேடி வரும்.பிறை தரிசனம் செய்திட ஆண்.பெண் பேதமில்லை. செல்வம், சந்தோஷம், கல்வி வேண்டுபவர்கள் அனைவருமே பிறை தரிசன வழிபாடு செய்திடலாம்.
மூன்றாம் பிறையை சிறப்பை இஸ்லாம் மதம், ஜைனம், கிறித்தவம், இந்து மதம் என அனைத்து மதங்களுமே ஒப்புக்கொண்டுள்ளன. பிறை தரிசனம் ஆயுளை விருத்தி அடையச் செய்வதோடு அளவில்லா செல்வங்களையும் கொண்டு வந்து சேர்க்கும்.
தம்பதிகளாக நின்று தரிசனம் செய்திட குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் விலகி மனதில் நிம்மதியும் , தெளிவான சிந்தனையும், ஆரோக்கியமும், தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் கூடும் என்பது ஆன்மீக அன்பர்களின் கருத்து.