அடுத்த ஆண்டு ரஜினியின் அரசியல் கட்சி நிச்சயம் – தமிழருவி மணியன் உறுதி!

அடுத்த ஆண்டு ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார் என்று தமிழருவி மணியன் மீண்டும் தெரிவித்துள்ளார். போயஸ் கார்டன் வீட்டில் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசித்து விட்டு வந்த தமிழருவி மணியன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “அடுத்த ஆண்டு ரஜினி அய்யா அவர்கள் நிச்சயமாக அரசியல் கட்சியைத் தொடங்குவார். ரஜினி கமல் கூட்டணி பற்றி அவர்கள் இருவருமே சொல்லிவிட்ட பிறகு, மூன்றாவது நபரான நான் எதுவும் சொல்ல தேவையில்லையே” என்று தெரிவித்தார். ரஜினியின் பிறந்தநாள் போது
 

அடுத்த ஆண்டு ரஜினியின் அரசியல் கட்சி நிச்சயம் – தமிழருவி மணியன் உறுதி!

அடுத்த ஆண்டு ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார் என்று தமிழருவி மணியன் மீண்டும் தெரிவித்துள்ளார்.

போயஸ் கார்டன் வீட்டில் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசித்து விட்டு வந்த தமிழருவி மணியன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

“அடுத்த ஆண்டு ரஜினி அய்யா அவர்கள் நிச்சயமாக அரசியல் கட்சியைத் தொடங்குவார். ரஜினி கமல் கூட்டணி பற்றி அவர்கள் இருவருமே சொல்லிவிட்ட பிறகு,  மூன்றாவது நபரான நான் எதுவும் சொல்ல தேவையில்லையே” என்று தெரிவித்தார்.

ரஜினியின் பிறந்தநாள் போது அரசியல் கட்சி குறித்தான அறிவிப்பு வருமா என்ற கேள்விக்கு, இப்போது கட்சியைத் தொடங்குவார் என்று நான் நினைக்க வில்லை என்று கூறினார்.

ஐந்து மாவட்டங்களைப் பிரித்த பிறகு உள்ளாட்சி தொகுதிகள் வரையறை செய்யாமல் தேர்தல் நடத்துவதை எதிர்த்து திமுக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் இருப்பதாலும், செ.கு. தமிழரசன் தொடர்ந்துள்ள துணைத் தலைவர்களுக்கான குட்இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கும் இருப்பதாலும் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என்று நம்பவில்லை என்றும் தமிழருவி மணியன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரு மணி நேரம் சந்திப்பில் அரசியல் தான் பேசியிருக்க வேண்டியதில்லை. குடும்ப விசயங்கள் குறித்தும் பேசியிருக்கலாம் தானே என்றும் கூறியுள்ளார்.

https://www.A1TamilNews.com

From around the web