ஏ.கே.ராஜன் தலைமையிலான நீட் ஆய்வுக்குழு நாளை முதல்வரிடம் அறிக்கை தாக்கல்..!

 
AKRajan

ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான ஆய்வுக்குழு நீட் தேர்வு பாதிப்பு குறித்து நாளை அறிக்கை தாக்கல் செய்கிறது.

தமிழ்நாட்டில், ‘நீட்’ தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு கடந்த ஜூன் மாதம் 10-ந் தேதி அரசாணை பிறப்பித்தது.

நீட் தேர்வு பாதிப்பு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் என யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம் என இக்குழு அறிவித்திருந்தது.

அதன்படி, சுமார் 89,342 பேர் நீட் தேர்வுக்க ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இந்த கருத்துகளை பரிசீலனை செய்த ஆய்வுக்குழு, பல கட்ட ஆலோசனைகளை நடத்தியது.

இந்நிலையில், ஏ.கே.ராஜன் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் தங்களின் அறிக்கையை நாளை காலை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பிக்கவுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

நீட் தேர்வு  செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டு, நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கி உள்ளது.

From around the web