பாமக எடுத்த முடிவு அவர்களுக்கு தான் இழப்பு... அதிமுகவுக்கு இல்லை; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

 
Jayakumar

உள்ளாட்சி தேர்தலில் தனித்துப்போட்டி என பாமக எடுத்த முடிவு அவர்களுக்கு தான் இழப்பு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் பணிகள், கூட்டணி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன.

இதற்கிடையில், சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிந்த பாமக நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என அறிவித்துள்ளது. இதனால், அதிமுக - பாமக கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில்,  தனித்துப்போட்டி என பாமக எடுத்த முடிவு அவர்களுக்கு தான் இழப்பு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

“உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப்போட்டி என்பது அவர்கள் கட்சி எடுத்த முடிவாகும். தனித்து போட்டி என பாமக எடுத்த முடிவால் அவர்களுக்கு தான் இழப்பு. அதிமுகவுக்கு எந்த இழப்பும் கிடையாது.

அதிமுகவை பாமக விமர்சனம் செய்வது என்பதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. அதிமுக ஆட்சியில் செய்த திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.” என்றார்.

From around the web