அமைச்சருக்கும், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கும் மருத்துவர்கள் செவிலியர்க்கும் எனது நன்றி - முதல்வர் ட்வீட்

 
CM-Stalin

மாரத்தான் வேகத்தில் செயல்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கும், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கும், மருத்துவர்களுக்கும், செவிலியர்க்கும் எனது நன்றி என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 43,051 முகாம்கள் மூலம் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மெகா தடுப்பூசி முகாம்களில் ஒரே நாளில் 28.53 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், “கொரோனாவை தடுத்து வெல்லும் ஆயுதமாம் தடுப்பூசி போடுவதை மாபெரும் பேரியக்கமாக நடத்தி வருகிறது தமிழ்நாடு அரசு.

இன்று 25 இலட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இந்தியச் சாதனை! இதுவரை 4 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இமாலய சாதனை!

மாரத்தான் வேகத்தில் செயல்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கும், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கும் மருத்துவர்கள் செவிலியர்க்கும் எனது நன்றி. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் செலுத்திக் கொள்ளுங்கள்! நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்” என பதிவிட்டுள்ளார்.

From around the web