செங்கல்பட்டு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கொரோனாவில் உயிரிழப்பு!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக இருந்து வந்த டாக்டர். சுகுமார் கொரோனாவில் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மருத்துவர்களும், செவிலியர்களும் கொரோனாவுக்கு பலியாகி வருவது அதிர்ச்சி அளித்து வருகிறது. மருத்துவர் சுகுமாரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக அரசு அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதாக கூறியுள்ளார். “கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு அரசு மருத்துவமனைத் தலைமை மருத்துவர் திரு. சுகுமார்
 

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கொரோனாவில் உயிரிழப்பு!செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக இருந்து வந்த டாக்டர். சுகுமார் கொரோனாவில் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மருத்துவர்களும், செவிலியர்களும் கொரோனாவுக்கு பலியாகி வருவது அதிர்ச்சி அளித்து வருகிறது. மருத்துவர் சுகுமாரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக அரசு அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதாக கூறியுள்ளார்.

“கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு அரசு மருத்துவமனைத் தலைமை மருத்துவர் திரு. சுகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு மிகவும் வேதனையுற்றேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரின் மரணம்- கொரோனா சிகிச்சையில் முன்கள வீரர்களாக இருப்போரைப் பாதுகாப்பதில் அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து காட்டி வரும் அலட்சியத்தின் அடையாளமாகும்.

அரசின் இதுபோன்ற தோல்விகள், கொரோனாவிற்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர், செவிலியர் ஆகியோருக்கு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி, நோய்த் தடுப்பில் மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

ஆகவே முன்களப் பணியாளர்கள் ஒவ்வொருவரின் உயிரையும் பாதுகாத்திட, இனியொரு மரணம் நிகழ்ந்து விடாமல் தடுத்திட, உரிய மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று அ.தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

அரசுத் தலைமை மருத்துவர் திரு. சுகுமாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும் எனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று  மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

A1TamilNews.com

From around the web