தமிழகத்தில் இன்று இரவு முதல் 30 மணி நேர முழு ஊரடங்கு!!
Apr 24, 2021, 14:08 IST
தமிழகத்தில் இன்று இரவு 10 மணியில் இருந்து 30 மணி நேரம் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்போது தொற்று எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்த நிலையில், கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 20-ந்தேதி முதல் தினமும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று இரவு 10 மணியில் இருந்து திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை பொது முடக்கம் அமலுக்கு வருகிறது.
இதன்மூலம் 30 மணி நேரம் தொடரும் முழு ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறி யாராவது வெளியில் வந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.