தமிழ்நாட்டில் மேலும் 11 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி!!

 
Omicron

தமிழ்நாட்டில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2-ந் தேதி காலடி எடுத்து வைத்த ஒமைக்ரான் வைரஸ், தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவின் 21 மாநிலங்களில் 653 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்று உறுதியானவர்களில் 6 பேருக்கு சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒமைக்ரான் பாதித்தவர்களில் 7 பேர் சென்னையிலும், கன்னியாகுமரி, திருவண்னாமலை, திருவாரூரில் தலா ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 45 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஒமைக்ரான் பாதித்தவர்களில் 4 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

From around the web