கமல்ஹாசனின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த சூர்யா!

சென்னை: புதிய கல்விக் கொள்கை தொடர்பான நடிகர் சூர்யாவின் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் தமிழிசை, ஹெச்.ராஜா போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மற்ற கட்சியினர் வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதற்கு நன்றி தெரிவித்து சூர்யா கடிதம் எழுதியுள்ளார். அதில் சூர்யா குறிப்பிட்டுள்ளதாவது, வணக்கத்திற்குரிய திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு, கல்விக் கொள்கை தொடர்பான என் கருத்துக்கு வந்த எதிர்வினைகளுக்கு எதிராகவும் எனக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பிய தங்களுக்கும்,
 

சென்னை: புதிய கல்விக் கொள்கை தொடர்பான நடிகர் சூர்யாவின் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் தமிழிசை, ஹெச்.ராஜா போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மற்ற கட்சியினர் வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதற்கு நன்றி தெரிவித்து சூர்யா கடிதம் எழுதியுள்ளார். 

அதில் சூர்யா குறிப்பிட்டுள்ளதாவது,

வணக்கத்திற்குரிய திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு,

கல்விக் கொள்கை தொடர்பான என் கருத்துக்கு வந்த எதிர்வினைகளுக்கு எதிராகவும் எனக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பிய தங்களுக்கும், தங்களின் மக்கள் நீதி மய்யம் அமைப்பிற்கும் எனது நன்றிகள்.

திரையுலகில் என் போன்ற கலைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் தங்களின் ஆதரவு, கல்விப் பணியில் தொடர்ந்து தீர்க்கமாகச் செயலாற்ற ஊக்கம் அளிக்கிறது.

தங்களின் தார்மீக ஆதரவிற்கு மீண்டும் என் நன்றிகள்.

அன்புடன்

சூர்யா”

இவ்வாறு கமல்ஹாசனுக்கு அனுப்பியுள்ள நன்றிக் கடித்ததில் சூர்யா கூறியுள்ளார்.

– வணக்கம் இந்தியா

From around the web