உச்சநீதிமன்றத்தில் நாளைய முக்கிய தீர்ப்புகள்!

சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பது, ரஃபேல் விமான முறைகேடு உள்ளிட்ட மூன்று முக்கிய வழக்குகளில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து உச்சநீதிமன்றம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட சீராய்வு மனுக்கள் மீதான வழக்கின் தீர்ப்பை நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் வழங்கவுள்ளது. இதேபோல் 36 ரஃபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடைபெறவில்லை என்ற தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரிய மனு
 

உச்சநீதிமன்றத்தில் நாளைய முக்கிய தீர்ப்புகள்!பரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பது, ரஃபேல் விமான முறைகேடு உள்ளிட்ட மூன்று முக்கிய வழக்குகளில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து உச்சநீதிமன்றம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட சீராய்வு மனுக்கள் மீதான வழக்கின் தீர்ப்பை நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் வழங்கவுள்ளது.

இதேபோல் 36 ரஃபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடைபெறவில்லை என்ற தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரிய மனு மீதும் நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. காவலாளியே திருடன் என பிரதமரை ராகுல் காந்தி விமர்சித்ததை எதிர்த்து பாஜக எம்.பி. மீனாட்சி லேகி தொடரப்பட்ட வழக்கிலும் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது.

வருகிற 17ஆம் தேதியுடன் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வுபெறவுள்ள நிலையில், முக்கிய வழக்குகளில் தீர்ப்பு நாளை வெளியாகவுள்ளது.

https://www.A1TamilNews.com

From around the web