பாரஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்..!

 
Devendra-SundarSingh

டோக்கியோ பாராஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம் கிடைத்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர்.

இதில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் தேவேந்திரா 64.35 மீ, சுந்தர் சிங் குர்ஜார் 64.01 மீ தொலைவுக்கு ஈட்டி எறிந்து முறையே வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை தட்டி சென்றுள்ளனர்.

இன்று ஒரே நாளில் ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.  இதனால், இந்தியா இதுவரை, ஒரு தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளது.

From around the web