காமன்வெல்த் போட்டில் இந்தியாவுக்கு 6வது தங்கப்பதக்கம்!! சாதனை படைத்தார் சுதிர்!

 
Sudhir

காமன்வெல்த் போட்டியில் பாரா பளுதூக்குதல் ஆடவர் பிரிவில் இந்தியா வீரர் சுதிர் தங்கம் வென்றார்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 29-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். 20 விளையாட்டுகளில் சுமார் 283 ஈவெண்டுகள் நடைபெற்று வருகிறது.

common-wealth

இந்தியாவை சார்ந்த 111 வீரர்கள் மற்றும் 104 வீராங்கனைகள் என மொத்தம் 215 பேர் 16 விதமான விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்கின்றனர். அந்த வகையில், பாரா பளுதூக்குதல் ஆடவர் பிரிவில் 134.5 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார் சுதிர். 34.5 புள்ளிகளைப் பெற்றது என்பது புதிய உலக சாதனையாகும். இந்தப் போட்டி முழுவதுமே மற்ற வீரர்களை விட சுதிர் முன்னணியில் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 6 தங்கப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.

இதனிடையே, காமன்வெல்த் வரலாற்றில் நீளம் தாண்டுதலில் வரலாறு படைத்துள்ளார் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர். காமன்வெல்த் வரலாற்றில் ஆண்கள் நீளம் தாண்டுதலில் கிடைக்கும் முதல் வெள்ளி பதக்கம் இது என்பதால் அவரின் சாதனை கூடுதல் சிறப்பை பெற்றுள்ளது.

Murali

அதே போன்று காமன்வெல்த் போட்டிகளில், குத்துச்சண்டையில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்கிற சாதனையைப் படைத்து, பதக்கத்தை உறுதி செய்திருக்கிறார் அமித் பங்கால். காமன்வெல்த் போட்டிகளில், பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில், அரையிறுதிக்குள் நுழைந்து பவினா பட்டேல் பதக்கத்தை உறுதி செய்திருக்கிறார்.

From around the web