18 லட்சம் கோடி ரூபாயை மக்களிடம் பிடுங்கிய மத்திய அரசு! சோனியா காந்தி குற்றச்சாட்டு!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாடு முழுவதும் சமூக தளங்களில் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் வீடியோ மூலம் மக்கள் ஒன்று திரண்டு பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். சோனியா காந்தி வீடியோ மூலம் கூறியுள்ளதாவது, கொரோனா பரவலால் மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதே நேரத்தில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்திக்கொண்டு இருக்கிறது. பெட்ரோல்
 

18  லட்சம் கோடி ரூபாயை மக்களிடம் பிடுங்கிய மத்திய அரசு! சோனியா காந்தி குற்றச்சாட்டு!!பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாடு முழுவதும் சமூக தளங்களில் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் வீடியோ மூலம் மக்கள் ஒன்று திரண்டு பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

சோனியா காந்தி வீடியோ மூலம் கூறியுள்ளதாவது,

கொரோனா பரவலால் மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதே நேரத்தில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்திக்கொண்டு இருக்கிறது. பெட்ரோல் விலை 80 ரூபாயை விட அதிமாகி விட்டது.

கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் இன்று வரையிலும் 22  தடவை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 12 காசும் அதிகரித்து உள்ளது.

2014-ம் ஆண்டு முதலாகவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்துவரும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை அரசு தொடர்ந்து உயர்த்திக் கொண்டு தான் இருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை சரிவால் ஏற்படும் பலனை மத்திய அரசு மக்களுக்கு அளிக்காமல் 12 தடவை கலால் வரியை உயர்த்தி இருக்கிறது. இதன்மூலம் 18 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை அரசு நியாயப்படுத்த முடியாது.

இந்த விலை உயர்வால் ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தர மக்கள், சிறுதொழில் செய்வோர் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பேரிடரின் நெருக்கடியான காலக்கட்டத்தில் மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய மத்திய அரசு அவர்களிடம் இருந்து பணத்தை பறித்து ஆதாயம் அடைந்து கொண்டிருக்கிறது.

கொரோனா பாதிப்பால் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி இருப்பதால் காங்கிரசார் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் இணைந்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்  பெட்ரோல், டீசல் மீது கடந்த மார்ச் மாதம் முதல் விதிக்கப்பட்ட கலால் வரி உயர்வையும் திரும்பப் பெறவேண்டும்.”  இவ்வாறு சோனியா காந்தி வீடியோ மூலம் கூறி உள்ளார்.

A1TamilNews.com

From around the web