திரும்பி வந்துட்டேன்… சிம்பு உருக்கம்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்தப்படத்தின் தொடக்க விழாவில் பாரதிராஜா, கலைப்புலி தாணு உள்ளிட்ட திரையுல பிரபலங்கள் பங்கேற்றனர். மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கல்லூரி கலைநிகழ்ச்சி ஒன்றில் சிம்பு கலந்து கொண்டு பேசியுள்ளார். சின்ன வயசிலிருந்தே நடித்து வருவதால், சிறிது இடைவேளை எடுத்துக் கொண்டேன். இப்போது திரும்பி வந்து விட்டேன். இனி தொடர்ந்து நடிப்பேன்
 

திரும்பி வந்துட்டேன்… சிம்பு உருக்கம்!நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்தப்படத்தின் தொடக்க விழாவில் பாரதிராஜா, கலைப்புலி தாணு உள்ளிட்ட திரையுல பிரபலங்கள் பங்கேற்றனர்.

மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கல்லூரி கலைநிகழ்ச்சி ஒன்றில் சிம்பு கலந்து கொண்டு பேசியுள்ளார். சின்ன வயசிலிருந்தே நடித்து வருவதால், சிறிது இடைவேளை எடுத்துக் கொண்டேன். இப்போது திரும்பி வந்து விட்டேன். இனி தொடர்ந்து நடிப்பேன் என்று சிம்பு கூறியுள்ளார்.

வெற்றி பெறும் போது பின்னால் நிறைய பேர் வருவார்கள். ஆனால் தோல்வியடைந்து விட்டான் என்று சொன்ன போதிலும் எனக்காக இருந்தீர்களே. உங்களை நான் எப்படி விட்டுக் கொடுப்பேன் என்று ரசிகர்களை நோக்கி உணர்ச்சி வசப்பட்டார் சிம்பு.

மேலும், என்னுடைய ரசிகர்களை பெண்கள் நம்பிக்கையுடன் காதலிக்கலாம், திருமணம் செய்து கொள்ளலாம். அவர்கள் எப்போது தங்கள் காதலி, மனைவியை கைவிடமாட்டார்கள். என்னையே கைவிடாதவர்கள் அவர்கள் என்று இளம்பெண்களுக்கு தன்னுடைய ரசிகர்களை சிபாரிசும் செய்தார் சிம்பு.

http://www.A1TamilNews.com

From around the web