திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை- ரஜினிகாந்த்

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த், திரு நங்கை கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் என்று கூறியுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஆதித்யா அருணாச்சலம் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் தர்பார் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்துடன், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் சுனில் ஷெட்டி, இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை அளித்த ரஜினிகாந்த், சீரியஸாக
 

திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை- ரஜினிகாந்த்ந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த், திரு நங்கை கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் என்று கூறியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஆதித்யா அருணாச்சலம் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் தர்பார் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது.

இதில் நடிகர் ரஜினிகாந்துடன், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் சுனில் ஷெட்டி, இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை அளித்த ரஜினிகாந்த், சீரியஸாக இருக்கும் என்பதால் பல ஆண்டுகளாக போலீஸ் கதாபாத்திரத்தை தவிர்த்ததாக தெரிவித்தார்.

மேலும் அலெக்ஸ் பாண்டியன் கதாபாத்திரத்திற்கு இணையான ரோலில் தர்பாரில் நடித்துள்ளதாக கூறிய ரஜினிகாந்த், ஒவ்வொரு இயக்குநருக்கும் வித்தியாசமான சிந்தனைகளும் படமாக்கும் முறையும் இருக்கும் என்றார். மேலும் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதே தனக்கு விருப்பம் என ரஜினிகாந்த் தெரிவித்தார்.

https://www.A1TamilNews.com

 

 

From around the web