கட்சி தொடங்காமலே, தேர்தலில் போட்டியிடாமலே ‘ஜெயித்த’ ரஜினி!

2019 நாடாளுமன்றத் தேர்தல் காலக்கட்டத்தை கொஞ்சம் நினைவு கூர்வோம். தமிழ்நாட்டில் பிரதமர் மோடிக்கு எதிரான அலை முழு வீச்சில் வீசிக் கொண்டிருந்த காலம். அரசியலுக்கு வருவது உறுதி என்று ரஜினி அறிவித்து இருந்ததால், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவாரா என்று ரஜினியைச் சுற்றியும் பரபரப்பாக இருந்த நாட்கள்! “ரஜினி வர்றேன்னு சொல்றாரு ஆனா வரமாட்டேங்கிறாரு.. அவர் வரவே மாட்டாரு.. படம் ஓடுறதுக்காக சொல்றாரு. கமல் பாத்தீங்களா. சொன்னாரு, வந்தாரு, தேர்தலில் நிக்கிறாரு…” – இந்த மாதிரி ரஜினிகாந்தின் அரசியல் வருகையை இன்றளவும்
 
  கட்சி தொடங்காமலே, தேர்தலில் போட்டியிடாமலே ‘ஜெயித்த’ ரஜினி!2019 நாடாளுமன்றத் தேர்தல் காலக்கட்டத்தை கொஞ்சம் நினைவு கூர்வோம் தமிழ்நாட்டில் பிரதமர் மோடிக்கு எதிரான அலை முழு வீச்சில் வீசிக் கொண்டிருந்த காலம். அரசியலுக்கு வருவது உறுதி என்று ரஜினி அறிவித்து இருந்ததால், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவாரா என்று ரஜினியைச் சுற்றியும் பரபரப்பாக இருந்த நாட்கள்!

“ரஜினி வர்றேன்னு சொல்றாரு ஆனா வரமாட்டேங்கிறாரு.. அவர் வரவே மாட்டாரு.. படம் ஓடுறதுக்காக சொல்றாரு. கமல் பாத்தீங்களா. சொன்னாரு, வந்தாரு, தேர்தலில் நிக்கிறாரு…” – இந்த மாதிரி ரஜினிகாந்தின் அரசியல் வருகையை இன்றளவும் கேலி சொல்லிக் கொண்டிருப்பவர்கள் ஏராளம் உண்டு. குறிப்பாக சில ஆன்லைன் செய்தி தளங்கள். அவர்களுக்கு பதிலளிக்க முடியாமல் கடுப்பில் பல்லைக் கடிக்கும் ரஜினி ரசிகர்களும் உண்டு.

ரஜினியைப் பொறுத்தவரை அரசியலுக்கு வருவேன் என்று சொன்னது ஒரே ஒரு தடவைதான். டிசம்பர் 31, 2017ம் ஆண்டு, “நான் அரசியலுக்கு வருவது உறுதி 234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடுவேன். பாராளுமன்றத் தேர்தலில் அப்போதைய சூழலைப் பொறுத்து முடிவு செய்வேன்,” என்று சொன்னார்.

அன்றைய சூழலில் எடப்பாடியின் அரசு எப்போ வேணுமானாலும் கவிழும் என்ற சூழலே இருந்தது. பாராளுமன்றத் தேர்தல் வரை தாக்குப் பிடிக்காது. சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்தே வரும் என்றே ஆரூடம் கூறப்பட்டது. இரண்டும் சேர்ந்து வந்தால் களத்தில் இறங்குவது உறுதி என்ற கருத்திலேயே அவ்வாறு ரஜினி சொல்லியிருந்தார். இதை புரிந்து கொண்ட மோடியும் பாஜகவும், அதிமுகவை தங்கள் பினாமியாக்கி,  இன்று வரையிலும் ஆட்சியை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

ரஜினி இன்னும் கட்சியும் ஆரம்பிக்கவில்லை, பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவும் இல்லை. ஆனாலும் தேர்தல் அரசியலில் போட்டியிடாமலே அவர் வென்றுவிட்டார் என்று சொல்லலாம். எப்படி?

பொதுவாக தேர்தல் அறிக்கையில், மக்கள் போராடும் விஷயங்கள் இடம் பெறும். தவிர கவர்ச்சிகரமான மக்கள் நலத்திட்டங்களையும் வாக்குறுதிகளாக கட்சிகள் அள்ளி வீசுவார்கள். இந்தத் தேர்தலில் மக்கள் போராடிக் கொண்டிருக்கும் விஷயங்களான ‘நீட் தேர்வு விலக்கு’, ‘கீழடி ஆய்வு’, ‘மீத்தேன் திட்டம் கேன்சல்’ போன்றவைகள் திமுக மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றன. 

மக்கள் மத்தியில் எந்த ஒரு விவாதமும் இல்லாத இரண்டு விஷயங்கள் திமுக வாக்குறுதிகளாக இடம் பெற்றது.   ‘இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை’ மற்றும்  ‘தென்னிந்திய நதிகள் இணைப்பு’ ஆகிய இரண்டும் கவனிக்கத்தக்க வாக்குறுதிகளாகி விட்டது! இந்த இரண்டு குறித்தும் மக்கள் மத்தியில் விவாதமோ, போராட்டங்களோ இல்லையே. பின்னர் ஏன் திமுக இதைச் சேர்த்தது?

அங்குதான் ரஜினிகாந்த் வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னால் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், “இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். அந்த பிரச்சனையை யாரும் கண்டுக்கவே இல்லை. கட்டாயம் அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்,” என்றார். மற்றொரு சமயம், “தென்னிந்திய நதிகளை மட்டுமாவது முதலில் இணைக்க வேண்டும். தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்… என் வாழ்நாளில் இது நடக்க வேண்டும்,” என்றும் சொல்லியிருந்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை. தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை யார் தீர்த்து வைப்பார்கள் என நம்புகிறீர்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள் என்று அறிக்கை வெளியிட்டார் ரஜினிகாந்த். போட்டி போட்டு அதிமுகவும் திமுகவும் சொல்லி வைத்தாற்போல் தென்னிந்திய நதிகளை இணைப்போம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளனர்.

அதைச் சொல்ல அதிமுகவுக்கு கொஞ்சமும் தகுதி இல்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, பாஜகவின் பினாமி ஆட்சியாக நடந்து கொண்டிருந்த கடந்த மூன்றாண்டுகளில் காவிரிப் பிரச்சனையையும் தீர்க்கவில்லை. ஆணையத் தீர்ப்பை மீறி கூடுதலாக அணை கட்ட மத்திய பாஜக அரசே அனுமதி கொடுத்துள்ளது. தென்னிந்திய நதிகள் இணைப்பு பற்றி மூச்சு கூட விடவில்லை. ஆனாலும், ரஜினிகாந்த் சொல்லி விட்டார் என்ற ஒரே காரணத்திற்காகவே அறிக்கையில் சேர்த்தார்கள் என்பதே உண்மை.

சரி, திமுக மட்டும் சுயமாக சிந்தித்ததா என்ன? அவர்களும் ரஜினிகாந்த் சொன்னதாலேயே தென்னிந்திய நதிகள் இணைப்பு என வாக்குறுதியில் சேர்த்தார்கள். நதி நீர் இணைப்பு என்று ரஜினிகாந்த் பல வருடங்களாகச் சொல்லி வருகிறாரே. 1 கோடி ரூபாயை வங்கியில் டெப்பாசிட் கூட செய்துள்ளாரே. அப்போதெல்லாம் சேர்க்காமல் 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சேர்க்க காரணம் என்ன?

அதற்கு முன்னால் ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று சொல்லவில்லை.  ஆனால் 2017 டிசம்பர் 31ம் தேதி   “நிச்சயம் வருவேன்” என்று சொல்லி விட்டார். ஆக, ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு மட்டுமே அவர் நீண்ட நாட்களாக சொல்லி வந்த நதி நீர் இணைப்பை, இரு கட்சிகளும் வாக்குறுதிகளாக அறிவிக்கக் காரணமாக அமைந்தது, அதுதான் ரஜினிகாந்த் என்ற ஆளுமையின் சக்தி. வேறு யாரும் இதைப் பற்றி பேசியிருந்தால் இரண்டு கட்சிகளும் கண்டு கொண்டிருக்க மாட்டார்கள்.

இலங்கை அகதிகள் விவகாரம்?. இதில் மு.க.ஸ்டாலின் பக்குவப்பட்ட அரசியல்வாதியாக நடந்து கொண்டுள்ளார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருந்ததால் இதை நிறைவேற்றியிருக்கவும் வாய்ப்பு இருந்தது. ரஜினிகாந்த் சொன்னார் என்று தள்ளி வைக்காமல், அவர் அரசியலுக்கு வரும் முன்னதாகவே நிறைவேற்றவும் துடித்தார் ஸ்டாலின். இலங்கை தமிழர் பிரச்சனையில் திமுகவுக்கு ஏற்பட்ட அவப்பெயரைத் துடைக்க வேண்டும் என்பதும் ஒரு காரணம்.

ரஜினியைப் பொறுத்தவரையிலும் மாற்று அரசியல் வேண்டும். மக்களுக்குத் தேவையானவற்றை அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற இரண்டே கொள்கைகள்தான். எதிர்க்கட்சியினர் சொன்னாலும், நாங்கள் நிறைவேற்றுவோம் என்ற ஸ்டாலினின் கொள்கை வரவேற்கதக்க அரசியல்தான்! இந்த இரண்டையும் நானே செய்து முடித்து விட்டால் ரஜினி அரசியலுக்கே வரத்தேவையில்லை என்றும் ஸ்டாலின் நினைத்திருக்கலாம்.

இத்தகைய செயல்பாடுகள் உண்மையிலேயே ஆரோக்கியமான அரசியல் போட்டியாக அமையும்.  கட்சி ஆரம்பிக்காமலேயே, போட்டியிடாமலேயே தன்னுடைய திட்டங்களை அரசியல் கட்சிகளை பேச வைத்து, அவர்களின் தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற வைத்த ரஜினிகாந்த்தின் ஆளுமை அது. 

சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களத்தில் குதிக்கும் போது மேலும் நல்ல திட்டங்களை ரஜினிகாந்த் அறிவிக்கக்கூடும். திமுகவும், அதிமுகவும் அதை காப்பி அடித்தால் தப்பே இல்லை. எல்லா கட்சிகளும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுப்பது தானே தமிழகத்திற்கு தேவை. .

ரஜினியின் அரசியல் வருகையால் தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த அரசியல் தழைக்கட்டும்!

– பாண்டியன்

A1TamilNews.com

From around the web