இயக்குநர் ராஜமெளலிக்கு கொரோனா!
இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மத்திய, மாநில அரசுகளால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் பிரபலங்கள், அமைச்சர்கள், ஏழை, நடுத்தர மக்கள் என எந்தவித பாகுபாடுமின்றி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சில நாட்களுக்கு முன் திரையுலகில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா ஆகியோருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.தற்போது இதில் ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யா குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
இந்த வரிசையில் தற்போது தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநரான ராஜமெளலிக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. பரிசோதனை செய்யப்பட்டதில் மிதமான கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி நாங்கள் எங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம்.
All of us are feeling better with no symptoms but are following all precautions and instructions…
Just waiting to develop antibodies so that we can donate our plasma…— rajamouli ss (@ssrajamouli) July 29, 2020
நோய் எதிர்ப்பு சக்தி உருவானதும் , பிளாஸ்மா தானம் செய்யக் காத்திருக்கிறோம் என தமது ட்விட்டர் பக்கத்தில் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.