கொரனாவுக்கு தடுப்பு மருந்து! கொரோனா காலத்திலும் அந்நிய முதலீடு! பிரதமர் மோடி பெருமிதம்!!
உள்ளூர் தயாரிப்புக்கு குரல் கொடுப்போம் என்பதே நாம் இனி உச்சரிக்க வேண்டிய மந்திரம். இன்று உலக நாடுகள் இந்தியாவை நம்பிக்கையுடன் பார்க்கின்றன. ஒரே நாடு ஒரே வரி, ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு என பல வழிகளில் இந்தியா முன்னேறி வருகிறது
நம்மிடம் முன்பு வென்டிலேட்டர்கள் இல்லாமல் இருந்தன. தற்போது அதனை தயாரிக்கிறோம். கொரோனா காலத்திலும் இந்தியாவில் அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது. நாட்டின் பொருளாதார முன்னேற்றம் தன்னிறைவு மூலம் எட்டப்படும். தன்னிறைவு இந்தியா என்ற லட்சியம் மெய்ப்படும்
நம்முடைய கனிம வளங்களை கொண்டே நாமும் உற்பத்தியும் செய்ய வேண்டும். அடுத்த 2 ஆண்டுகள் எப்படி முன்னேற வேண்டும் என உறுதிமொழி எடுக்க வேண்டும். தன்னிறைவு இந்தியா என்ற கனவு மிக விரைவில் நிறைவேறும். நமது கலாசாரம், பாரம்பரியத்திற்கு மிகப்பெரும் வரலாறு உள்ளது
மக்கள் மனதில் நிலைக்க வேண்டியது, உள்நாட்டு பொருட்கள், உள்நாட்டு முன்னேற்றம். விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். விவசாயிகளின் செலவுகளை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது . விவசாய தயாரிப்புகளை பன்னாட்டு சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும்
வங்கிகளின் ஒருங்கிணைப்பதன் மூலம் விவசாய கடன்களை எளிதாக வழங்க முடியும். ரூ 1.10 லட்சம் கோடி செலவில் உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பு மருந்து மிக விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிரான 3 தடுப்பு மருந்துகள் பரிசோதனையில் உள்ளன.