தமிழகப் பெண்களுடைய முன்னேற்றத்திற்கு காரணம் பெரியார் – அழுத்தமாகக் கூறும் தமிழச்சி தங்கபாண்டியன்!

தமிழ்நாட்டுப் பெண்களுடைய முன்னேற்றத்திற்கு காரணம் தந்தை பெரியாரும், கலைஞர் கருணாநிதியும் என்று திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறியுள்ளார். 1971ம் ஆண்டு சேலம் மாநாடு குறித்த ரஜினிகாந்தின் சர்ச்சைக்குரிய பேச்சைத் தொடர்ந்து பெரியார் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய அரும்பணிகளை, திமுக மற்றும் திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பட்டியலிடத் தொடங்கியுள்ளனர். #NationalGirlChildDay தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறியதாவது, “தந்தை பெரியார் இல்லையென்றால், பகுத்தறிவும், சுயமரியாதையும், இனமான
 

தமிழகப் பெண்களுடைய முன்னேற்றத்திற்கு காரணம் பெரியார் – அழுத்தமாகக் கூறும் தமிழச்சி தங்கபாண்டியன்!மிழ்நாட்டுப் பெண்களுடைய முன்னேற்றத்திற்கு காரணம் தந்தை பெரியாரும், கலைஞர் கருணாநிதியும் என்று திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறியுள்ளார்.

1971ம் ஆண்டு சேலம் மாநாடு குறித்த ரஜினிகாந்தின் சர்ச்சைக்குரிய பேச்சைத் தொடர்ந்து பெரியார் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய அரும்பணிகளை,  திமுக மற்றும் திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பட்டியலிடத் தொடங்கியுள்ளனர்.

#NationalGirlChildDay

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறியதாவது,

“தந்தை பெரியார் இல்லையென்றால், பகுத்தறிவும், சுயமரியாதையும், இனமான உணர்வையும் முன்னெடுத்து இருக்கின்ற அந்த இயக்கம் 50 ஆண்டு காலமாக இல்லை என்றால், சமூகநீதிக்கான ஒரு இடம் கிடைத்திருக்காது. பெண்களுடைய முன்னேற்றம் இங்கே இவ்வளவு சாத்தியப்பட்டிருக்காது. தமிழகம் பெண்களுடைய கல்வியிலும், சமூகநீதியிலும், 69% இட ஒதுக்கீடு என முன் நிற்கின்ற மாநிலமாக இருப்பதற்கான விதையிட்டவர்கள், பெரியார் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர்,” என்று கூறினார்.

http://A1TamilNews.com

From around the web