வெங்காயம், பூண்டு சாப்பிட எனக்கு விருப்பமில்லை – நிர்மலா சீதாராமன்

வெங்காயமோ பூண்டோ சாப்பிட தாம் அதிக அக்கறை கொண்டதில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வெங்காயம் விலை உயர்வு இல்லத்தரசிகளை கடுமையாக பாதித்துள்ளது என்றும் கூடுதல் அளவிலான வெங்காயத்தை சேமித்து வைக்கும் நவீன தொழில்நுட்பம் இந்தியாவில் இல்லை என தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே மக்களவையில் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். அப்போது இடைமறித்த சில
 

வெங்காயம், பூண்டு சாப்பிட எனக்கு விருப்பமில்லை – நிர்மலா சீதாராமன்வெங்காயமோ பூண்டோ சாப்பிட தாம் அதிக அக்கறை கொண்டதில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வெங்காயம் விலை உயர்வு இல்லத்தரசிகளை கடுமையாக பாதித்துள்ளது என்றும் கூடுதல் அளவிலான வெங்காயத்தை சேமித்து வைக்கும் நவீன தொழில்நுட்பம் இந்தியாவில் இல்லை என தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே மக்களவையில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். அப்போது இடைமறித்த சில எம்பிக்கள் வெங்காயத்தை நீங்கள் அதிகமாக பயன்படுத்துவதில்லையா என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் தாம் வெங்காயமோ பூண்டோ சாப்பிடுவதில்லை என்றும் அது குறித்து எம்பிக்கள் கவலைப்படவேண்டாம் எனவும் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

https://www.A1TamilNews.com

 

From around the web