பிரதமர் மோடி, அதிபர் ஜி ஜிங்பிங்கை கொலை செய்ய சதியா?நைஜீரிய இளைஞரிடம் விசாரணை!
சென்னை: கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வந்த நைஜீரிய இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் சந்திக்கவுள்ளனர். இதன் காரணமாக சென்னை வரவுள்ள சீன அதிபர், கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் நட்சத்திர விடுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி நள்ளிரவில் நட்சத்திர விடுதிக்கு வந்த நைஜீரிய இளைஞரை காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் பாஸ்போர்ட் இல்லாததால் சந்தேகமடைந்த காவல்துறையினர், விசாரணை நடத்தினர். இதில் அந்த நைஜீரிய இளைஞர் தங்கியிருந்த பள்ளிகரணையில் உள்ள வீட்டில் பாஸ்போர்ட் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து கார் மற்றும் பாஸ்போர்டை பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என கூறி நைஜீரிய இளைஞரை அனுப்பி வைத்தனர்.
– வணக்கம் இந்தியா