3வது நாளாக தொடரும் நாராயணசாமியின் தர்ணா… ‘கிரண் பெடியை மாத்துங்க’!

புதுச்சேரி : புதுச்சேரி துணைநிலை ஆளுநராக உள்ள கிரண் பெடியை மாற்றக்கோரி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் வைத்தியலிங்கம் கடிதம் எழுதி உள்ளார். கிரண்பேடிக்கு எதிராக ஆளுநர் மாளிகை முன், கருப்பு சட்டை அணிந்து முதல்வர் நாராயணசாமி தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். 3வது நாளாக இன்றும் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் தர்ணா போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். ஆளுநரோ டெல்லிக்கு பறந்து விட்டார். இந்நிலையில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை மாற்றக் கோரி மத்திய
 

3வது நாளாக தொடரும் நாராயணசாமியின் தர்ணா… ‘கிரண் பெடியை மாத்துங்க’!புதுச்சேரி : புதுச்சேரி துணைநிலை ஆளுநராக உள்ள கிரண் பெடியை மாற்றக்கோரி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் வைத்தியலிங்கம் கடிதம் எழுதி உள்ளார்.

கிரண்பேடிக்கு எதிராக ஆளுநர் மாளிகை முன், கருப்பு சட்டை அணிந்து முதல்வர் நாராயணசாமி தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். 3வது நாளாக இன்றும் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் தர்ணா போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். ஆளுநரோ டெல்லிக்கு பறந்து விட்டார்.

இந்நிலையில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை மாற்றக் கோரி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் வைத்தியலிங்கம் கடிதம் எழுதி உள்ளார்.

3வது நாளாக தொடரும் நாராயணசாமியின் தர்ணா… ‘கிரண் பெடியை மாத்துங்க’!

அதில், “கிரண்பேடி விவகாரத்தில் மத்திய அரசு உடனே தலையிட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி அரசில் ஆளுநர் கிரண்பேடியின் தலையீடு அதிகமாக உள்ளது. புதுச்சேரியில் அசாதாரண சூழல் நிலவுவதால், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க புதுச்சேரிக்கு இடைக்கால நிர்வாகியை நியமிக்க வேண்டும். தற்போதைய அசாதாரண சூழலை எதிர்கொண்டு, நிர்வாகத்தை செம்மைப்படுத்தும் திறமையான இடைக்கால நிர்வாகியை நியமிக்க வேண்டும்,” எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

– வணக்கம் இந்தியா

From around the web