ஓய்வு பெற்றது மிக் 27 ரக போர் விமானங்கள்!

கார்கில் போரில் இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக இருந்த மிக் 27 ரக போர் விமானங்கள் விமானப் படையிலிருந்து நாளையுடன் ஓய்வு பெறுகின்றன. சுமார் 40 ஆண்டுகாலம் இந்திய விமானப்படையில் சேவையாற்றிய மிக் 27 போர் விமானம் பகதூர் என விமானிகளால் அன்போடு அழைக்கப்படுகிறது. மிக் 27 ரக போர் விமானம் சோவியத் யூனியனால் தயாரிக்கப்பட்டது. 1981ஆம் ஆண்டு இந்த வகை விமானம் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் உலகில் பயன்பாட்டில் இருந்த போர் விமானங்களிலேயே இது
 

ஓய்வு பெற்றது மிக் 27 ரக போர் விமானங்கள்!கார்கில் போரில் இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக இருந்த மிக் 27 ரக போர் விமானங்கள் விமானப் படையிலிருந்து நாளையுடன் ஓய்வு பெறுகின்றன. சுமார் 40 ஆண்டுகாலம் இந்திய விமானப்படையில் சேவையாற்றிய மிக் 27 போர் விமானம் பகதூர் என விமானிகளால் அன்போடு அழைக்கப்படுகிறது.

மிக் 27 ரக போர் விமானம் சோவியத் யூனியனால் தயாரிக்கப்பட்டது. 1981ஆம் ஆண்டு இந்த வகை விமானம் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் உலகில் பயன்பாட்டில் இருந்த போர் விமானங்களிலேயே இது தான் மிகச்சிறந்த போர் விமானமாக இருந்தது. கார்கில் போரின் போது எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது.

1999ஆம் ஆண்டு கார்கில் பகுதியில் பாகிஸ்தான் படைகள் ஊடுருவி ஆக்கிரமித்தன. இதனை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டது. அந்த போரில் பாகிஸ்தான் படைகளை விரட்டியதில் முக்கிய பங்காற்றியவை மிக் 27 ரக விமானங்கள். இந்த விமானங்களை பகதூர் என்றே நமது விமானப்படை வீரர்கள் அன்போடு அழைக்கின்றனர்.

வானில் இருந்து நிலத்தை நோக்கி தாக்குவதில் வல்லமை படைத்தவை மிக் 27 போர் விமானங்கள். இந்த விமானங்களை தயாரிப்பதற்கான உரிமம் பெற்ற பிறகு ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடட் 167 மிக் 27 விமானங்களை தயாரித்தது. மணிக்கு ஆயிரத்து 700 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட விமானம், 4 ஆயிரம் கிலோ வெடிபொருட்களை தாங்கி சென்று தாக்கும் வல்லமை படைத்தது.

கிட்டதட்ட 40 ஆண்டுகாலம் நமது வான் எல்லை பாதுகாவலனாக இருந்த மிக் 27 போர் விமானங்களுக்கு படிப்படியாக ஓய்வளிக்கப்பட்ட நிலையில் கடைசி ஸ்குவாட்ரானில் உள்ள 7 விமானங்களும் நாளையுடன் ஓய்வு பெறுகின்றன. ஜோத்பூர் விமானப்படை தளத்தில் உள்ள 7 மிக் 27 போர் விமானங்களும் நாளை கடைசியாக பறக்கின்றன. இதனை அடுத்து ராணுவ மரியாதையுடன் இவற்றுக்கு பிரியா விடை அளிக்கப்படுகிறது.

இனி இந்த விமானங்களை நாம் எப்போதுமே வானில் காண முடியாது. ஏனெனில் எந்த நாட்டிலும் இத்தகைய விமானங்கள் பயன்பாட்டில் இல்லை. இந்த பிரியா விடை நிகழ்வில் விமானப்படை தளப்தி ஏர் சீஃப் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பதூரியா மற்றும் இந்த விமானத்தை இயக்கிய விமானிகளும் பங்கேற்க உள்ளனர். நமது வான் எல்லையை பாதுகாத்து வந்த மிக் 27 போர் விமானங்கள் இனி காட்சி பொருளாகவே இருக்கும்.

https://www.A1TamilNews.com

From around the web