கியா ரே… பிளாட்பாரத்தில் பைக்கா?.. மோட்டார் சைக்கிள் காரர்களை பணிய வைத்த துணிச்சல் பெண்மணி!
பிளாட்பாரத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற இளைஞர்களை துணிச்சலாக மறித்து நின்று நடைபாதையை பாதசாரிகளுக்காக மீட்டியுள்ளார் ஒரு பெண்மணி.
மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமான புனேயில் போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகமாக உள்ளது. போக்குவரத்து நெரிசலில் செல்ல முடியாத இரு சக்கர வாகன ஓட்டிகள், அருகில் உள்ள பிளாட்பாரத்தில் ஓட்டிச் செல்லும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த மோட்டார் சைக்கிள் சாகசக்காரர்களால் நடைபாதையில் பாதசாரிகள் செல்ல முடியாமலும், சாலையை கடக்க முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். போக்குவரத்து போலீசார் சாலையின் முக்கிய சந்திப்புகளில் மட்டுமே இருப்பதால், இடையில் உள்ள தூரத்தை பிளாட்பாரத்தில் ஓட்டிச் செல்கின்றனர் பைக் வாலாக்கள்.
இந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர களத்தில் இறங்கினார் நிர்மலா கோகலே என்ற நடுத்தர வயது பெண்மணி. எஸ்.என்.டி.டி கல்லூரிக்கருகே உள்ள சாலையின் ஓரத்தில் உள்ள பிளாட்பாரத்தின் மத்தியில் நின்று கொண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களை நேரடியாக எதிர்த்து நின்றார்.
This aunty from Pune is an inspiration to many. Well done Ma'am.
Shame on Bikers who ride on footpaths. It's sad to see senior citizens have to do the job what traffic police is supposed to do in our country.@nnatuTOI @mumbaimatterz @MNCDFbombay @mid_daypic.twitter.com/AB1TWmQPRW— Roads of Mumbai ?? (@RoadsOfMumbai) February 21, 2020
பிளாட்பாரத்தின் நடுவே ஒரு பெண்மணி மறித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த பைக் காரர் அதிர்ச்சியுடன் நிறுத்தினார். “வேண்டுமென்றால் என் மீதி மோதி விட்டு கடந்து செல் அல்லது ரோட்டில் இறங்கிச் செல்” என்று நிர்மலா எச்சரிக்கை விடுத்தார். வேறு வழியில்லாமல் சாலையில் இறங்கினார் இளைஞர். அவருக்குப் பின்னால் வந்தவர்களும் சாலைக்கு இறங்கினார்கள்.
நிர்மலாவுடன் இன்னொரு பெண்மணியும் அவருடைய கணவரும் சேர்ந்து கொண்டார்கள். இந்த காட்சியை படம்பிடித்தவர் ட்விட்டரில் பகிரவும், அது நாடு முழுவதும் பரபரப்பாகி விட்டது.