நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ந் தேதி தொடங்குகிறது

 
Parliment

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ந் தேதி தொடங்க இருக்கிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து 2022-23 ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31-ந் தேதியிலிருந்து தொடங்க இருக்கிறது.

2022-23 ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, ஜனவரி 31-ந் தேதியிலிருந்து பிப்ரவரி 11 வரை முதல் கட்டமாகவும் மார்ச் 14-ந் தேதியிலிருந்து ஏப்ரல் 8-ந் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

2022-23 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ந் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறார்.

From around the web