மேகதாது அணை தொடர்பாக 4 மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை - ஒன்றிய அரசு

 
Meghadau

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக 4 மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

காவிரியின் குறுக்கே அணை கட்டுவது சுமூகமாக பேசி முடிவு காணும் வகையில் தொடர்பாக 4 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டு எல்லையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டும் பணிகளைத் தொடங்கியுள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் தென்பகுதிகளிலுள்ள மற்ற மாநிலங்களில் தண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

இதனால் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மற்ற மாநிலங்களும் மாற்று கருத்துக்களை முவைத்து வருகின்றன.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் சுமூக முடிவு காணும் வகையில் கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய நான்கு மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் திட்டமிட்டுள்ளார்.

4 மாநிலங்களின் கருத்துகளை கேட்டு அதன் அடிப்படியில் மேகதாது விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக 4 மாநில முதல்வர்களுடம் ஒன்றிய அரசு விரைவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது.

From around the web