புதுவையில் மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் ஊரடங்கு! தமிழிசை அதிரடி உத்தரவு !!
May 3, 2021, 20:57 IST
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களுக்கு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அத்தியாவசிய கடைகள், மருந்தகங்கள் தவிர பிற கடைகள் அனைத்தையும் வரும் 3-ம் தேதி வரை திறக்க அரசு தடை விதித்து இருந்தது.
இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க புதுச்சேரியில் ஏற்கெனவே தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டித்துள்ள நிலையில், கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று முதல் மே 10 (திங்கள்கிழமை) வரை ஊரடங்கு நீட்டித்துள்ளதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் தெரிவித்துள்ளார்.