15 முதல் 18 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது

 
Vaccine-for-kids

நாடு முழுவதும் சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் 24-ந் தேதி முதன்முதலாக தென்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் உலகமெங்கும் பரவத்தொடங்கியது. இந்தியாவையும் இந்த வைரஸ் விட்டு வைக்கவில்லை. இதையடுத்து இதுவரை தடுப்பூசி திட்டத்தின்கீழ் வராத குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும், இதேபோன்று மற்ற பெரியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

இந்த நிலையில் பிரதமர் மோடி, கிறிஸ்துமஸ் பண்டிகையன்று நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அப்போது அவர், “கொரோனா பரவலை தடுக்க 15 - 18 வயது வரையுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3-ந் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி இன்று நாடு முழுவதும் 15 - 18 வயது வரையிலான சிறுவர், சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தற்போது தொடங்கி உள்ளது. பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சிறுவர், சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சிறுவர், சிறுமிகள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

தடுப்பூசி செலுத்தி 30 நிமிடம் கண்காணிப்பில் வைத்த பின்னரே மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதன் பின் 28 நாட்களுக்கு பிறகு 2-வது டோஸ் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தடுப்பூசி போடுவதற்காக பள்ளிகளில் தனியாக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

From around the web