பவானிபூர் தொகுதி இடைத்தேர்தல்; வேட்பு மனு தாக்கல் செய்தார் மம்தா பானர்ஜி.!

 
Mamata

பவானிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட முதல்வர் மம்தா பானர்ஜி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜி  தலைமையிலான திரிணமூல் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும்போட்டி நிலவியது. தேர்தலில்  திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தபோதிலும், நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார்.

இருப்பினும் மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இதனால், 6 மாதங்களில் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வாக வேண்டிய கட்டாயம் இருந்தது.  இதையடுத்து, மம்தா பானர்ஜி முன்பு வழக்கமாகப் போட்டியிடும் பவானிபூா் தொகுதியில் வெற்றி பெற்ற திரிணமூல் காங்கிரஸின் சோபன்தேவ் சட்டோபாத்யாய தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் காலியாக உள்ள பவானிபூர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி, ஜாங்கிபூர் தொகுதியில் ஜாகீர் ஹூசைன், சாம்செர்காஞ்ச் தொகுதியில் அமிருல் இஸ்லாம் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

பவானிபூர்  சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட முதல்வர் மம்தா பானர்ஜி  இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.  பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு எதிராக வழக்கழிஞர் பிரியங்கா திப்ரூவலை பாஜக களமிறக்கியுள்ளது.  பவானிப்பூர் தொகுதியில் வரும் செப்-30 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.  இந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அக்-3 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

From around the web