பிரசாத் ஸ்டூடியோ மீது இளையராஜா போலீசில்  புகார்!

இசை உலகில் தனக்கென தனி பாணியை உருவாக்கியுள்ளவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவர் திரையுலகில் நுழைந்த காலத்தில் இருந்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் தான் பல ஆண்டு காலமாக இளையராஜா இசையமைத்து வருகிறார். அவருக்காக தனி தியேட்டரை ஒதுக்கி கொடுத்திருந்தது பிரசாத் நிர்வாகம். இளையராஜாவின் திறமையை மதித்து எல்.வி.பிரசாத் இதனை செய்தார். தற்போது ஸ்டூடியோ வருமானம் இல்லாமல் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அங்குள்ள பல ஸ்டூடியோக்களில் படமாக்கப்பட்டு வருகின்றன. அதில் வரும் வருமானத்தை பெருக்கும் விதமாக ,
 

பிரசாத் ஸ்டூடியோ மீது இளையராஜா போலீசில்  புகார்!இசை உலகில் தனக்கென தனி பாணியை உருவாக்கியுள்ளவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவர்  திரையுலகில் நுழைந்த காலத்தில் இருந்து  சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் தான் பல ஆண்டு காலமாக இளையராஜா இசையமைத்து வருகிறார்.

அவருக்காக தனி தியேட்டரை ஒதுக்கி கொடுத்திருந்தது பிரசாத் நிர்வாகம். இளையராஜாவின் திறமையை மதித்து எல்.வி.பிரசாத் இதனை செய்தார். தற்போது ஸ்டூடியோ வருமானம் இல்லாமல்  தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அங்குள்ள  பல ஸ்டூடியோக்களில் படமாக்கப்பட்டு வருகின்றன.

அதில் வரும் வருமானத்தை பெருக்கும் விதமாக , எல்.வி.பிரசாத்தின் வாரிசுகள் இளையராஜாவிற்கு ஒதுக்கப்பட்ட  ஸ்டூடியோவிற்கு பதிலாக  மாற்று தியேட்டா் கொண்டு வர முடிவு செய்துள்ளனா்.

இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு இயக்குநர் பாரதிராஜா தலைமையில் திரையுலகினா் ஒன்று கூடி பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினரைச் சந்தித்துப் பேசினார்கள்.

இதுவரை  பிரசாத் ஸ்டூடியோவில் 42 ஆண்டுகளாக சுமார் 6000 பாடல்கள் இசையமைத்துள்ளதாகவும், வாடகை தர தயாராக இருப்பதாகவும்  சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.

பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தன்னை காலி செய்ய தடை விதிக்கவேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்படாததால் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம். பிரிவியூ திரையரங்கை விலைக்கு வாங்கி அங்கு தனது இசைக்கூடத்தை அமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

செப்டம்பர் மாதம் முதல் ராஜா ஸ்டூடியோஸ் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் தமது அறையில் இருந்த இசைக் குறிப்புகளைச் சேதப்படுத்தியுள்ளதாகத் இளையராஜா  புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

A1TamilNews.com

From around the web