தெற்கத்தி பெண்களும் வட நாட்டுப் பெண்களும்… இலக்கியச் சான்றுகள் சொல்லும் சேதி என்ன?

தன் கணவன் அவளை சந்தேகித்து தீயில் இறங்க பணிக்கிறான். இறங்கி தான் பத்தினி என்பதை சொல்கிறாள். ஊராரின் சந்தேகத்தை காரணங்காட்டி கர்பினியான தன் மனைவியை வனத்தில் தள்ளுகிறார் கணவன். வனத்திலேயே வாழ்கிறாள், ஊர் திரும்பியதும் மடிகிறாள். – இது ‘ராமன், சீதா’ கதை. ஓர் அழகிய இளம் மங்கை. அவளுக்கு முதிர்ந்த கணவன். மனமுவந்து வாழ்கிறாள். ஒரு கட்டத்தில் கணவன் குஷ்டரோகியாகிறான். அதன் பிறகும் அவளுக்கு வெறுப்பு ஏற்படவில்லை. பண்ணாத குசும்பெல்லாம் அக்கிழடு செய்தும் அவனை ஆராதிக்கிறாள்.
 

தெற்கத்தி பெண்களும் வட நாட்டுப் பெண்களும்… இலக்கியச் சான்றுகள் சொல்லும் சேதி என்ன?

ன் கணவன் அவளை சந்தேகித்து தீயில் இறங்க பணிக்கிறான். இறங்கி தான் பத்தினி என்பதை சொல்கிறாள். ஊராரின் சந்தேகத்தை காரணங்காட்டி கர்பினியான தன் மனைவியை வனத்தில் தள்ளுகிறார் கணவன். வனத்திலேயே வாழ்கிறாள், ஊர் திரும்பியதும் மடிகிறாள். – இது ‘ராமன், சீதா’ கதை.

ஓர் அழகிய இளம் மங்கை. அவளுக்கு முதிர்ந்த கணவன். மனமுவந்து வாழ்கிறாள்.
ஒரு கட்டத்தில் கணவன் குஷ்டரோகியாகிறான். அதன் பிறகும் அவளுக்கு வெறுப்பு ஏற்படவில்லை. பண்ணாத குசும்பெல்லாம் அக்கிழடு செய்தும் அவனை ஆராதிக்கிறாள். ஒரு கட்டத்தில் ஒரு தாசியை பார்த்து “நான் இவளோடு கூட வேண்டுமென்கிறான். அதற்கும் அவள் இசைகிறாள். தாசிக்கு கூலியாக தாசியின் வீட்டை துப்புரவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்கிறாள். தன் கணவனை தோளில் தூக்கிச் சென்று தாசியின் வீட்டுக்குச் செல்கிறாள். – இது நளாயினி கதை.

– இவை வட மொழி இலக்கியங்கள்.

தன் கணவனை செய்யாத குற்றத்திற்காக கொலை செய்துவிட்டது அரசு. தன் இடப்பக்க முலையை திருகி எறிந்து ஒரு நகரத்தையே எரிக்கிறாள், தன் உளளத்து எரிச்சல் பற்றி எரிகிறது என கெக்கலிட்டு சிரிக்கிறாள், ஆவேசமாக எரித்தபடியே வேகமாக நடந்து சென்று சற்று நிதானித்து திரும்பி பார்க்கிறாள், ‘அனைத்தும் எரிந்துவிட்டதா அல்லது இன்னும் மிச்சமிருக்கிறதா’ என்று. – இது சிலப்பதிகாரம்.

அவள் ஓர் பேரழகி. அவள் அழகில் கவரப்பட்டு ஓர் இளவரசன் தன் காதலை அவளிடம் கூறுகிறான். அவள் வலக்கையில் வாங்கி இடக்கையில் தூர வீசிவிட்டு சலமற்று நடக்கிறாள். இளவரசனும் ஆசிட் வீசவில்லை, ஆபாச படமெடுத்து மிரட்டவில்லை. அவள் உணர்வுக்கு மதிப்பளித்து சென்றுவிடுகிறான்.

அவள் கணவன் அவளை கொல்வதற்காக திட்டமிட்டு மலை உச்சிக்கு அழைத்து செல்கிறான். அவளும் விவரமறியாது கூடவே செல்கிறாள். மலை உச்சியை எட்டியதும்தான் தெரிகிறது, ‘இவன் தன்னை கொலை செய்ய அழைத்து வந்திருக்கிறான்’ என்று. யோசிக்கிறாள். இறுதியாக கணவனிடம் பேசுகிறாள், “நீ என்னை கொல்லதானே அழைத்து வந்திருக்கிறாய்? நான் மடிவது பற்றி எந்த கவலையுமில்லை.

ஒரே ஒரு வேண்டுகோள்தான். என் கணவர் நீங்கள். உங்களை மூன்று முறை சுற்றி வந்து காலில் விழுந்து ஆசி வாங்கினால் மோட்சம் செல்லும் பாக்யம் கிட்டும் எனக்கு” என்று. “அட அதனாலென்ன தாராளமாக சுற்றி வா” என்று கணவனும் சொல்ல, சுற்றுகிறாள். முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்றில் தன் கணவனை மலையிலிருந்து கீழே தள்ளிவிட்டு கொல்கிறாள். – இது மணிமேகலை

தெற்கத்தி பெண்களும் வட நாட்டுப் பெண்களும்… இலக்கியச் சான்றுகள் சொல்லும் சேதி என்ன?

இவை தமிழ் இலக்கியங்கள்.

ஓர் ஆண் என்ன செய்தாலும் அவனுக்கு சேவகம் செய்வதொன்றே பெண்ணின் பணி என்பதினை சொன்னதுதான் வடமொழி இலக்கியங்கள். அவன் ஆணோ, கணவனோ, அரசனோ, ஆண்டவனோ அநீதி என்றால், அறம் தவறினால் அடங்காதே, அவனை எதிர்த்து போராடு என்பதை போதிப்பதுதான் தமிழ் இலக்கியங்கள். தமிழ் மொழி எப்போதுமே பெண்களை கொண்டாடுவது. வடமொழி இலக்கியங்கள் பெண்களை அடிமைத்தனமாக்குவது.

உலகளவில் பிரசித்தம் பெற்ற ஓர் அயல்நாட்டு எழுத்தாளர் கூறியது இது, “என்னை அடிமைப்பட்ட பெண்ணாகப் படைக்காமல் ஆணாகப் படைத்த இறைவனுக்கு நன்றி” என்று. உலகம் முழுவதுமே பெண்களை காலுக்கு கீழே வைத்திருந்த காலகட்டத்தில் பெண்களை மேன்மைமிகு பொக்கிஷமாக போற்றிப் புகழ்ந்தது தமிழ் சமூகம்.

எழுத்தாளர் சு.வெ கூறியது இது, “சங்ககாலத்தில், 47 பெண் எழுத்தாளர்களைக் கொண்டது உலகிலேயே தமிழ்ச் சமூகம் மட்டும்தான். பாரியின் மகள்கள் ‘அங்கவை, சங்கவை’ எழுதிய ‘அற்றைத் திங்கள் அவ் வெண்ணிலவில்’ என்ற பாடலுக்கு ஒப்பான சோகத்தை கூறும் பாடல் உலகிலேயே வேறெங்கும் கிடையாது. உலக மொழிகளின் தாய் என்று கூறப்படும் கிரேக்க இலக்கியத்தில் கூட 7 பெண்கள்தான் உண்டு. தேவபாசை என்று கூறப்படும் சமஸ்கிருதத இலக்கியத்தில் ஒரு பெண் எழுத்தாளர்கள் கூட கிடையாது. ஏன் சமஸ்கிருதத்தை வாசிக்கவோ, பேசவோ கூட பெண்களுக்கு உரிமை கிடையாது. ஆனால் தங்கக்கட்டிகளிலும், பானை ஓடுகளிலும் பெண்களின் பெயரை பொரித்து புழங்குமளவிற்கு தமிழ்ச் சமூகம் நாகரீகம் கொண்டது”
கணவன் விஜயகாந்த் ‘மூச்சுவிடக் கூடாது’ என்றதும் மூச்சுவிடாமல் மூச்சுமுட்டி இறந்து போகும் மனைவி ரேவதி போன்ற தமிழ் சினிமா, பெண் தலையெடுக்க ஆரம்பித்ததும் பெண் தலையை எடுக்கும் தினசரி செய்திகள் என நம் வரலாறு வடக்கு நோக்கி செல்கிறதோ என்ற அச்சம் வருகிறது. நம் வரலாறுகளை, இலக்கியங்களை மீளுரு செய்தாலே போதும் நம் வாழ்வியல் நெறிகளுக்கு. ஆனால் நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்லும் அபத்தங்கள்தான் கண்முன்னே வெளிச்சமாக மினுமினுக்கிறது தற்போது. நாமும் அதற்கொப்பதான் நம்மை நாமே ஒப்புகொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

நன்றி : வாட்ஸ் அப் பகிர்வு

http://www.A1TamilNews.com

From around the web