அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் வழக்கு…. உயர்நீதிமன்றம் உத்தரவு!

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சென்னை மாநகராட்சி பகுதிகளில் சாலை , மழை நீர் வடிகால் உள்ளிட்ட 112 பணிகளுக்கு கடந்த 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் கோரப்பட்டது. மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகளில், ஆற்று மணல் பயன்படுத்துவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு எம்-சாண்ட் பயன்படுத்தியது, சாலைப் பணியில் தாருக்கு இரண்டு மடங்கு கணக்கு காட்டியது போன்ற முறைகேடுகளில் 600 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக
 

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் வழக்கு…. உயர்நீதிமன்றம் உத்தரவு!ள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை மாநகராட்சி பகுதிகளில் சாலை , மழை நீர் வடிகால் உள்ளிட்ட 112 பணிகளுக்கு கடந்த 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் கோரப்பட்டது.

மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகளில், ஆற்று மணல் பயன்படுத்துவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு எம்-சாண்ட் பயன்படுத்தியது, சாலைப் பணியில் தாருக்கு இரண்டு மடங்கு கணக்கு காட்டியது போன்ற முறைகேடுகளில் 600 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியது. சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

ஒரு அலுவலகத்தின் கம்ப்யூட்டர் IP முகவரியை பயன்படுத்தி பல ஒப்பந்தங்கள் கோரப்பட்டிருப்பதாகவும், இந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அமைச்சருக்கும் தொடர்பிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது,  இடைக்கால அறிக்கையை லஞ்ச ஒழிப்புத் துறையினர் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்தனர். மேலும், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசமும் கேட்டுள்ளனர்.

இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இறுதி முடிவு எடுக்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை தமிழக அரசுக்கு நேரடியாக அறிக்கையை தாக்கல் செய்ததை நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வழக்கு விசாரணை ஏப்ரல் 16ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

http://www.A1TamilNews.com

From around the web