குருத்வாராவை பைனாகுலர் வழியாக தரிசனம் செய்ய ஆர்வம் காட்டும் சீக்கியர்!

பாகிஸ்தான்: கர்தார்பூர் குருத்வாராவை காண ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தெரியாத சீக்கியர்கள் பைனாகுலர் வழியாக காண ஆர்வம் காட்டி வருகின்றனர். சீக்கிய மத குருவான குருநானக், தனது இறுதி நாட்களை பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் கழித்ததாகக் கூறப்படுகிறது. அங்குள்ள குருத்வாராவை சீக்கியர்கள் காண வசதியாக இரு நாடுகளுக்கும் இடையே வழித்தடம் அமைக்கப்பட்டது. அண்மையில் திறந்து வைக்கப்பட்ட இந்த வழித்தடம் வழியாகச் செல்ல ஐந்தாயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் நாள் ஒன்றுக்கு சுமார் 250 பேர் மட்டுமே குருத்வாராவை
 

குருத்வாராவை பைனாகுலர் வழியாக தரிசனம் செய்ய ஆர்வம் காட்டும் சீக்கியர்!பாகிஸ்தான்: கர்தார்பூர் குருத்வாராவை காண ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தெரியாத சீக்கியர்கள் பைனாகுலர் வழியாக காண ஆர்வம் காட்டி வருகின்றனர். சீக்கிய மத குருவான குருநானக், தனது இறுதி நாட்களை பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் கழித்ததாகக் கூறப்படுகிறது. அங்குள்ள குருத்வாராவை சீக்கியர்கள் காண வசதியாக இரு நாடுகளுக்கும் இடையே வழித்தடம் அமைக்கப்பட்டது.

அண்மையில் திறந்து வைக்கப்பட்ட இந்த வழித்தடம் வழியாகச் செல்ல ஐந்தாயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் நாள் ஒன்றுக்கு சுமார் 250 பேர் மட்டுமே குருத்வாராவை தரிசனம் செய்வதாக தெரியவந்துள்ளது. நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குருத்வாராவை காண ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கத் தெரியாத பலர், பஞ்சாப் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள பைனாகுலர் மாடத்தின் வழியாக தரிசனம் செய்து வருகின்றனர்.

நேரில் சென்று வழிபடுவோரின் எண்ணிக்கையைவிட பைனாகுலரில் காண்போரின் எண்ணிக்கை அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.A1TamilNews.com

From around the web