உடம்பில் டெஸ்டரை வைத்து மின்சார சோதனை செய்த ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி!

ஈரோடு: உயர் மின் அழுத்த மின் கம்பிகளை வயல்வெளிகளில் நடுவே கொண்டு செல்ல விவசாயிகளிடம் எதிர்ப்பு இருந்து வரும் நிலையில், மின் கம்பிகளுக்கு கீழே மின்சாரத் தாக்குதல் உள்ளது என்று ஈரோடு எம்.பி.கணேசமூர்த்தி சோதனை செய்து உறுதிபடுத்தியுள்ளார். முன்னதாக விவசாயிகளுடன் பேசிய கணேசமூர்த்தி, இந்தப் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என்று கூறியிருந்தார். தற்போது உயர்மின் அழுத்த மின் கம்பிகளுக்கு கீழே நின்று கொண்டு, மின்சாரம் உள்ளதா என்று சோதனை செய்யும் டெஸ்டரை உடம்பு மீது வைத்துப்
 

உடம்பில் டெஸ்டரை வைத்து மின்சார சோதனை செய்த ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி!ஈரோடு: உயர் மின் அழுத்த மின் கம்பிகளை வயல்வெளிகளில் நடுவே கொண்டு செல்ல விவசாயிகளிடம் எதிர்ப்பு இருந்து வரும் நிலையில், மின் கம்பிகளுக்கு கீழே மின்சாரத் தாக்குதல் உள்ளது என்று ஈரோடு எம்.பி.கணேசமூர்த்தி சோதனை செய்து உறுதிபடுத்தியுள்ளார்.

முன்னதாக விவசாயிகளுடன் பேசிய கணேசமூர்த்தி, இந்தப் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என்று கூறியிருந்தார். தற்போது உயர்மின் அழுத்த மின் கம்பிகளுக்கு கீழே நின்று கொண்டு, மின்சாரம் உள்ளதா என்று சோதனை செய்யும் டெஸ்டரை உடம்பு மீது வைத்துப் பிடித்து, அதில் விளக்கு எரியும் காட்சியை படம் பிடித்துள்ளார்.

ஈரோடு விஜய மங்கலம் அருகே மூணான்பள்ளி என்ற கிராமத்தில் இந்த சோதனையை அவர் நடத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதம் எழுப்புவேன் என்று கூறியுள்ள கணேசமூர்த்தி, நீதிமன்றத்திலும் அறிக்கை தாக்கல் செய்யப் போவதாகவும் கூறியுள்ளார்.

 

From around the web