துப்பாக்கியால் சுட்ட தந்தை! திமுக எம்.எல்.ஏ. கைது!!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதயவர்மனின் தந்தை தந்தை லட்சுமிபதி திமுக முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர். திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் வசித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த இமயம்குமார் குடும்பத்தினருக்கும், எம்.எல்.ஏ. இதயவர்மன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. செங்காடு கிராமத்தில் உள்ள சங்கோதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் அருகே உள்ள 350 ஏக்கர் நிலத்தை சென்னையை சேர்ந்தவர்களுக்கு இமயம்குமார் வாங்கி
 

துப்பாக்கியால் சுட்ட தந்தை! திமுக எம்.எல்.ஏ. கைது!!செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதயவர்மனின் தந்தை தந்தை லட்சுமிபதி திமுக முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர். திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் வசித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த இமயம்குமார் குடும்பத்தினருக்கும், எம்.எல்.ஏ. இதயவர்மன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

செங்காடு கிராமத்தில் உள்ள சங்கோதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் அருகே உள்ள 350 ஏக்கர் நிலத்தை சென்னையை சேர்ந்தவர்களுக்கு இமயம்குமார் வாங்கி கொடுத்துள்ளதாகவும், அந்த நிலத்துக்கு செல்ல வழி இல்லை என்பதால், அருகில் உள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்ததாகவும் தெரிகிறது.

இதற்கு எம்.எல்.ஏ. தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த நிலத்தை பார்வையிடுவதற்காக இமயம்குமார், சென்னையை சேர்ந்த ரவுடிகளுடன் செங்காடு சங்கோதி அம்மன் கோவில் அருகே சென்றுள்ளார். அங்கு எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதியும் இருந்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இமயம்குமாருடன் வந்த ரவுடி கும்பல் திடீரென எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதி, அவரது உறவினர் குருநாதன் ஆகியோரை அரிவாளால் வெட்டியுள்ளனர். பதிலுக்கு லட்சுமிபதி, தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் இமயம்குமாரின் காரை நோக்கி சுட்டுள்ளார்.
 
அந்த வழியாக சென்ற தையூரை சேர்ந்த கீரை வியாபாரி சீனிவாசன் மீது அந்த குண்டு பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
அரிவாளால் வெட்டப்பட்டதால் படுகாயம் அடைந்த லட்சுமிபதி, குருநாதன் ஆகியோர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோன்று படுகாயம் அடைந்த இமயம் குமார் தரப்பினரும் சிகிச்சைக்காக சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
 
இதையடுத்து திமுக எம்எல்ஏ இதயவர்மன் மீது வழக்குப்பதிவு செய்து இரு மாவட்ட காவல்துறையினரும் தீவிரமாக தேடி வந்தனர்.
 
இந்நிலையில் நிலத்தகராறு காரணமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் தொடர்புடைய திருப்போரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. இதயவர்மன் சென்னை அருகே மேடவாக்கம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

From around the web