துப்பாக்கியால் சுட்ட தந்தை! திமுக எம்.எல்.ஏ. கைது!!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதயவர்மனின் தந்தை தந்தை லட்சுமிபதி திமுக முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர். திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் வசித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த இமயம்குமார் குடும்பத்தினருக்கும், எம்.எல்.ஏ. இதயவர்மன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
செங்காடு கிராமத்தில் உள்ள சங்கோதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் அருகே உள்ள 350 ஏக்கர் நிலத்தை சென்னையை சேர்ந்தவர்களுக்கு இமயம்குமார் வாங்கி கொடுத்துள்ளதாகவும், அந்த நிலத்துக்கு செல்ல வழி இல்லை என்பதால், அருகில் உள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்ததாகவும் தெரிகிறது.
இதற்கு எம்.எல்.ஏ. தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த நிலத்தை பார்வையிடுவதற்காக இமயம்குமார், சென்னையை சேர்ந்த ரவுடிகளுடன் செங்காடு சங்கோதி அம்மன் கோவில் அருகே சென்றுள்ளார். அங்கு எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதியும் இருந்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.