ரஜினி ட்வீட்! ரசிகர்கள் உற்சாகம்!!

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகம் மட்டுமல்லாமல் உலக அளவில் பேசப்பட்ட சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் குறித்து ரஜினிகாந்த் எந்த கருத்தும் சொல்லாமல் இருந்து வந்தார். முன்னதாக, போலீசாருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்த ரஜினி, காவல்துறையின் அத்துமீறல்களை அமைதியாக வேடிக்கைப் பார்க்கிறாரே, மனித நேயம் இல்லையா என்ற ரீதியில் ரஜினியை நோக்கி சரமாரியான கேள்விக் கணைகள் வீசப்பட்டது. காவல்துறையின் அத்து மீறலால் மிகப்பெரிய சோகம் நடந்துள்ளது, நம்ம தலைவர் இன்னும் கண்டிக்கவில்லையே என்று ரஜினி ரசிகர்களே
 

ரஜினி ட்வீட்! ரசிகர்கள் உற்சாகம்!!கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகம் மட்டுமல்லாமல் உலக அளவில் பேசப்பட்ட சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் குறித்து ரஜினிகாந்த் எந்த கருத்தும் சொல்லாமல் இருந்து வந்தார்.

முன்னதாக, போலீசாருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்த ரஜினி, காவல்துறையின் அத்துமீறல்களை அமைதியாக வேடிக்கைப் பார்க்கிறாரே, மனித நேயம் இல்லையா என்ற ரீதியில் ரஜினியை நோக்கி சரமாரியான கேள்விக் கணைகள் வீசப்பட்டது.

காவல்துறையின் அத்து மீறலால் மிகப்பெரிய சோகம் நடந்துள்ளது, நம்ம தலைவர் இன்னும் கண்டிக்கவில்லையே என்று ரஜினி ரசிகர்களே வருத்தத்துடன் இருந்தது கண்கூடாகத் தெரிந்தது. ஆனாலும் சமூக ஊடகங்களில் தங்கள் தலைவருக்கு ஆதரவாக பதிலளித்து வந்தனர்.

இந்நிலையில் சத்தியமாக விடவே கூடாது என்ற ஹேஷ் டேக்குடன் ரஜினி வெளியிட்டுருந்த ட்வீட்டும். அதனுடன் தன்னுடைய புதிய படமும் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் தலைவர் எப்போதும் நியாயத்தின் பக்கம் தான் என்று பெருமிதத்தோடு கருத்து பதிவு செய்து வருகிறார்கள். மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவினரையும் கடுமையாகச் சாடத் தொடங்கியுள்ளனர்.

ரஜினியின் ஒரே ஒரு ட்வீட், அவருடைய ரசிகர்களை உற்சாகமாக களமாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.

A1TamilNews.com

From around the web