கண்திருஷ்டியைப் போக்க இதைச் செய்தாலே போதும்!

நாம் நிறைய கஷ்டப்பட்டு நேர்மையான முறையில் உழைத்து சம்பாதித்தாலும் சில சமயங்களில் அந்த பணம் நம் கையில் தங்காது. வரும் வருமானத்தை முழுமையாக அனுபவிக்க முடியாமல் கஷ்டங்கள் துரத்திக் கொண்டே இருக்கும். அழையா விருந்தாளியாய் பிரச்சனைகள் வந்து நிம்மதியை குலைக்கும். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமான காரணம் கண் திருஷ்டி தான். இந்தக் கண் திருஷ்டிகளிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள சில பரிகாரங்களை செய்வது அவசியம். நம்மைச் சுற்றியுள்ளவர்களின் வயிற்றெரிச்சல் நம் மீது
 

கண்திருஷ்டியைப் போக்க இதைச் செய்தாலே போதும்!நாம் நிறைய கஷ்டப்பட்டு நேர்மையான முறையில் உழைத்து சம்பாதித்தாலும் சில சமயங்களில் அந்த பணம் நம் கையில் தங்காது. வரும் வருமானத்தை முழுமையாக அனுபவிக்க முடியாமல் கஷ்டங்கள் துரத்திக் கொண்டே இருக்கும்.

அழையா விருந்தாளியாய் பிரச்சனைகள் வந்து நிம்மதியை குலைக்கும். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமான காரணம் கண் திருஷ்டி தான்.

இந்தக் கண் திருஷ்டிகளிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள சில பரிகாரங்களை செய்வது அவசியம். நம்மைச் சுற்றியுள்ளவர்களின் வயிற்றெரிச்சல் நம் மீது படாமல் இருக்க எளிய பரிகாரம் செய்யலாம்.

5 மிளகை உள்ளங்கைகளில் எடுத்துக் கொண்டு வீட்டு வாசலில் கிழக்கு நோக்கி நிற்க வேண்டும். நம்முடைய தலையை ஏழு முறை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் சுற்றிக் கொள்ள வேண்டும். அதனுடன் மேலும், கீழுமாக 7முறை ஏற்றி இறக்க வேண்டும்.

இப்போது கையில் இருக்கும் 5 மிளகில், நான்கு மிளகுகளை ஒவ்வொரு திசையிலும் அதாவது கிழக்கு, மேற்கு ,வடக்கு, தெற்கு 4 திசைகளிலும் திசைக்கு ஒன்றாகத் தூக்கி வீச வேண்டும்.மீதம் உள்ள ஒரு மிளகை வானத்தை நோக்கி மேல் பக்கமாக எவ்வளவு உயரமாக தூக்கி வீச முடியுமோ அவ்வளவு தூரம் தூக்கி வீசிவிட வேண்டும்.

இந்த எளிய பரிகாரத்தை அமாவாசை , வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6 மணிக்கு மேல் செய்ய வேண்டும். வீட்டு வாசலுக்கு வெளியே மட்டுமே செய்ய வேண்டும். அதனால் தெருவில் ஜன நடமாட்டம் அடங்கிய இரவில் கூட செய்யலாம்.

தொழில் செய்யும் இடங்களிலோ, கடை வாசலிலோ, அலுவலக வாசலிலோ செய்யலாம. கடை உரிமையாளர் மட்டுமே பரிகாரத்தை செய்ய வேண்டும்.பணியாளர்களைப் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகளுக்கும் ,குழந்தையின் தாய் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

நம்பிக்கையுடன் ஒரே ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்தாலே போதும். பலனை கண்கூடாக உணரலாம்.

A1TamilNews.com

From around the web