மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் எம்எஸ் டோணி இல்லை!
மும்பை: உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்ததிலிருந்து டோனியின் எதிர்காலம் குறித்த பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்றன.
டோணியின் நீண்ட கால நண்பரான அருண் பாண்டே அண்மையில் பிடிஐக்கு அளித்த பேட்டியில், “டோனி ஓய்வு பெறுவதற்கான உடனடி திட்டங்கள் எதுவும் இல்லை. அவரைப் போன்ற ஒரு சிறந்த வீரரின் எதிர்காலம் குறித்த தொடர்ச்சியான ஊகங்கள் வருவது துரதிர்ஷ்டவசமானது,” என்றார்.
ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கும் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்தவுடன், டோணியின் எதிர்கால திட்டங்கள் குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
ராணுவத்துக்கு சேவை…
இந்த நிலையில் டோணி தனது துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய விளையாட்டிலிருந்து இரண்டு மாத ஓய்வு எடுப்பதாக பிசிசிஐக்கு தெரிவித்துள்ளார். இதனால் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் அவர் கலந்து கொள்ள மாட்டார். பிராந்திய இராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் ஆக உள்ளார் டோணி.
இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “நாங்கள் மூன்று விஷயங்களை தெளிவுப்படுத்த விரும்புகிறோம். எம்.எஸ். டோணி இப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை. அவர் முன்னர் செய்த தனது துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய இரண்டு மாத ஓய்வு நாளை எடுத்து உள்ளார். கேப்டன் விராட் கோலி மற்றும் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் ஆகியோரின் முடிவை நாங்கள் இப்போது அறிவித்துள்ளோம்,” என்றார்.
– வணக்கம் இந்தியா