பெருமாளுக்கு செருப்பை காணிக்கையாக படைத்த பக்தர்!

கரூர்: தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண பெருமாளுக்கு பக்தர் ஒருவர் விநோதமாக பிரம்மாண்டமான செருப்பு ஒன்றை காணிக்கையாக படைத்தது பொதுமக்களிடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. திண்டுக்கல மாவட்ட கருங்கல் பகுதியை சேர்ந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் காலம் காலமாக ஒத்த செருப்பு என்ற செம்மாளி செய்து கரூர் தாந்தோணிமலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமண பெருமாள் சுவாமிக்கு காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்த வருடமும் சுவாமி தங்கள் கனவில் வந்து இந்த அளவுடைய ஒத்த செருப்பு செய்து காணிக்கையாக செலுத்த
 

கரூர்: தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண பெருமாளுக்கு பக்தர் ஒருவர் விநோதமாக பிரம்மாண்டமான செருப்பு ஒன்றை காணிக்கையாக படைத்தது பொதுமக்களிடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

திண்டுக்கல மாவட்ட கருங்கல் பகுதியை சேர்ந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் காலம் காலமாக ஒத்த செருப்பு என்ற செம்மாளி செய்து கரூர் தாந்தோணிமலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமண பெருமாள் சுவாமிக்கு காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

இந்த வருடமும் சுவாமி தங்கள் கனவில் வந்து இந்த அளவுடைய ஒத்த செருப்பு செய்து காணிக்கையாக செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளாராம். அதன்படி பெருமாளின் பாதத்தினை தோல் எடுத்து ஒத்த பாதம் செருப்பு 70 இன்ச் அளவிற்கு செய்துள்ளார்.

அதை ஊர்வலமாக கரூர் நகரின் முக்கியவீதிகளின் வழியாகவும், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் மற்றும் பல்வேறு ஆலயங்களின் வழியாக எடுத்து கொண்டு சென்று தாந்தோன்றிமலை பெருமாள் ஆலயத்தில் அவர் பாதத்தில் சமர்ப்பித்து வேண்டுதலை நிறைவேற்றினார்.

மேலும், இந்த காணிக்கை செலுத்தியதோடு, பெருமாள் ஆசிர்வாதம் பெற்றார். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சுவாரஸ்யத்தினை ஏற்படுத்தியது.

 

From around the web