அந்தியூர் பயங்கரம்: செல்போனில் அதிக நேரம் பேசியதால் நடத்தையில் சந்தேகம்… மண்வெட்டியால் 2–வது மனைவியை வெட்டி கொன்ற கணவன்!

அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தர்மன் (வயது 48). விவசாயி. முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டதால், தர்மன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்தியூர் அருகே உள்ள மூங்கில்பட்டி பகுதியை சேர்ந்த விஜயசாந்தி (வயது 24) என்பவரை 2–வது திருமணம் செய்து கொண்டார். விஜயசாந்தி ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். தர்மனும், விஜயசாந்தியும் ஆப்பக்கூடல் அருகே உள்ள பெரியகாளியூர் டேங்க் தோட்டம் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து
 

அந்தியூர் பயங்கரம்: செல்போனில் அதிக நேரம் பேசியதால் நடத்தையில் சந்தேகம்… மண்வெட்டியால் 2–வது மனைவியை வெட்டி கொன்ற கணவன்!அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தர்மன் (வயது 48). விவசாயி. முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டதால், தர்மன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்தியூர் அருகே உள்ள மூங்கில்பட்டி பகுதியை சேர்ந்த விஜயசாந்தி (வயது 24) என்பவரை 2–வது திருமணம் செய்து கொண்டார். விஜயசாந்தி ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர்.

தர்மனும், விஜயசாந்தியும் ஆப்பக்கூடல் அருகே உள்ள பெரியகாளியூர் டேங்க் தோட்டம் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 11 மாதங்களே ஆன ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் விஜயசாந்தி அடிக்கடி செல்போனில் அதிகநேரம் பேசி வந்துள்ளார்.

இதனால் கணவர் தர்மனுக்கு விஜயசாந்தியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. எனவே விஜயசாந்தியை அவர் கண்டித்துள்ளார். அதனை கண்டுகொள்ளாத விஜயசாந்தி, செல்போனில் தொடர்ந்து நண்பர்களுடன் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தர்மன் வீட்டுக்கு வந்தார். அப்போதும் வழக்கம் போல விஜயசாந்தி செல்போனில் பேசியபடி இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தர்மன் வீட்டில் கிடந்த மண்வெட்டியை எடுத்து மனைவி விஜயசாந்தியின் தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டினார்.

இதனால் ரத்தவெள்ளத்தில் விஜயசாந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதைத்தொடர்ந்து தர்மன் தன்னுடைய குழந்தையை தூக்கிக்கொண்டு, காமநாயக்கன்பாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். குழந்தையை தன் தாய் பாப்பம்மாளிடம் விட்டுவிட்டு, நேற்று அதிகாலை ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்துக்கு சென்று, தன்னுடைய 2–வது மனைவியை வெட்டிக்கொன்றுவிட்டதாகக் கூறி சரண் அடைந்தார்.

போலீசார் கொலை நடந்த வீட்டுக்குச் சென்று விஜயசாந்தியின் உடலை பவானி அரசு நறுத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தர்மனை கைது செய்த ஆப்பக்கூடல் போலீசார், விசாரித்து வருகின்றனர்.

படம்: தினத்தந்தி

From around the web