மாஸ்க் போடுங்கப்பா... தேக்குனாலும் கொரோனா அரிச்சிரும்ப்பா - நடிகர் வடிவேலு அட்வைஸ்

 
Vadivelu

முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ. 5 லட்சம் கொரோனா நிதிக்கான காசோலையை நடிகர் வடிவேலு வழங்கினார்.

நடிகர் வடிவேலு சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ. 5 லட்சம் கொரோனா நிதிக்கான காசோலையை வழங்கினார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் வடிவேலு கூறியதாவது,

முதல்வர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன். முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக எளிமையாக இருக்கிறார். குடும்பத்தில் ஒரு நபராக நினைத்து என்னிடம் பேசினார். முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்சம் நன்கொடை கொடுத்துள்ளேன்.

ஆட்சிக்கு வந்த 2 மாதத்தில் உலகமே உற்றுப் பார்க்கும் வகையில் கொரோனாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுப்படுத்தியுள்ளார். இது மக்களுக்கு பொற்காலம். கருணாநிதி இருந்திருந்தால் இந்த ஆட்சியை கண்டு பெருமை அடைந்திருப்பார் .

தமிழ்நாடு முதல்வரே தெருத்தெருவாக சென்று மக்கள் தடுப்பூசி போட முகாம் அமைத்து வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். யார் மனதும் புண்படுத்தாமல் ஒவ்வொரு திட்டங்களும் செயல்படுத்தி வருகிறார்.

அனைவரும் முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று  தனது படத்தின் காமெடி காட்சியை சுட்டிக் காட்டி வலியுறுத்தினார்.

“மாஸ்க் போடுங்கப்பானா நாங்களாம்  தேக்கு ணே , போ... ணே , போ... ணே னு சொல்றான் ; யப்ப  தேக்குனாலும்  கொரோனா அரிச்சிரும்பா...!”  என கூறினார்.

தொடர்ந்து கொங்குநாடு சர்ச்சை குறித்து விமர்சித்த அவர், ‘நல்லா இருக்கிற தமிழ்நாட்டை எதுக்கு பிரிச்சுக்கிட்டு. நாடு, நாடு என தனித்தனியாக பிரித்தால் என்னாவது ?. நான் அரசியல் பேசல. இதெல்லாம் பேசும்போது தல சுத்துது.’

மீண்டும் இனி அதிக படங்களில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு நல்லதே நடக்கும் என நடிகர் வடிவேலு குறிப்பிட்டார்.

From around the web