நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது சந்திராயன் 2!

ஸ்ரீஹரிகோட்டா: சென்னையை அடுத்த ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜுலை 22 ம் தேதி சந்திராயன் – 2 விண்கலம், விண்ணில் ஏவப்பட்டது. 3,485 கிலோ எடையுள்ள அந்த விண்கலத்தில், நிலவில் இறங்கவும், சுற்றி வரவும், ஆய்வு செய்யவும் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதுவரை, பூமியின் சுற்று வட்டப் பாதையில் சுற்றி வந்த அந்த விண்கலம், ஆறு முறை உயர்த்தப்பட்டு, இன்று அதிகாலை, 3:00 – 4:00 மணிக்குள், நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் சென்றது. இஸ்ரோ விஞ்ஞானிகள், பெங்களூருவில்
 

நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது சந்திராயன் 2!ஸ்ரீஹரிகோட்டா: சென்னையை அடுத்த ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜுலை 22 ம் தேதி  சந்திராயன் – 2 விண்கலம், விண்ணில் ஏவப்பட்டது.

3,485 கிலோ எடையுள்ள அந்த விண்கலத்தில், நிலவில் இறங்கவும், சுற்றி வரவும், ஆய்வு செய்யவும் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதுவரை, பூமியின் சுற்று வட்டப் பாதையில் சுற்றி வந்த அந்த விண்கலம், ஆறு முறை உயர்த்தப்பட்டு, இன்று அதிகாலை, 3:00 – 4:00 மணிக்குள், நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் சென்றது.

இஸ்ரோ விஞ்ஞானிகள், பெங்களூருவில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து வருகிறார்கள். திட்டமிட்டபடி, சந்திராயன்- 2 விண்கலம், செப்டம்பர் 7- ம் தேதி, நிலவில் இறங்கும் என்று, இஸ்ரோ வி்ஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

From around the web