இளையராஜாவுக்காக களத்தில் இறங்கிப் போராடும் பாரதிராஜா!

என் உயிர்த் தோழன் என்று இளையராஜாவின் நட்பைப் போற்றும் விதமாக படத்தலைப்பு வைத்து மகிழ்ந்த பாரதிராஜா, தற்போது இளையராஜவுக்காக களம் இறங்கிப் போராடுகிறார். பிரசாத் ஸ்டூடியோவில் நீண்ட காலமாக இளையராஜாவுக்கு என்று தனி அறை மற்றும் ரெக்கார்டிங் ஸ்டுடியோவும் உண்டு. ஆயிரக்கணக்கான பாடல்களை அங்கே இருந்து கம்போஸ் செய்துள்ளார். திடீரென்று பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் இளையராஜாவை அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர். திடீரென்று வெளியேற்றப் பட்டால் இளையராஜா எங்கிருந்து இசை அமைக்க முடியும் என்று திரையுலகில் கேள்வி
 

இளையராஜாவுக்காக களத்தில் இறங்கிப் போராடும் பாரதிராஜா!ன் உயிர்த் தோழன் என்று இளையராஜாவின் நட்பைப் போற்றும் விதமாக படத்தலைப்பு வைத்து மகிழ்ந்த பாரதிராஜா, தற்போது இளையராஜவுக்காக களம் இறங்கிப் போராடுகிறார்.

பிரசாத் ஸ்டூடியோவில் நீண்ட காலமாக இளையராஜாவுக்கு என்று தனி அறை மற்றும் ரெக்கார்டிங் ஸ்டுடியோவும் உண்டு. ஆயிரக்கணக்கான பாடல்களை அங்கே இருந்து கம்போஸ் செய்துள்ளார். திடீரென்று பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் இளையராஜாவை அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர்.

திடீரென்று வெளியேற்றப் பட்டால் இளையராஜா எங்கிருந்து இசை அமைக்க முடியும் என்று திரையுலகில் கேள்வி எழுந்தது.  பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்த பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட முன்னணி இயக்குனர்கள், திரையுலகினருடன் சென்று இருந்தார் பாரதிராஜா. முதலில் பாரதிராஜாவை பிரசாத் ஸ்டூடியோவுக்குள் அனுமதிக்க மறுத்ததால் அங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் பாரதிராஜாவுடன் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினர் பேச்சு வார்த்தை நடத்தினர். இறுதியில் இளையராஜாவுக்கு கால அவகாசம் கொடுப்பதற்கு பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. திரையுலகின் சார்பில் இளையராஜாவுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்யப்படும் என்றும் பாரதிராஜா கூறியுள்ளார்.

சமீபத்தில் இளையராஜாவும் பாரதிராஜாவும் காரில் தேனிக்கு சென்று பழைய நினைவுகளில் மூழ்கி வந்திருந்தனர். இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்புகளும் எழுதுந்துள்ளது.

A1TamilNews.com

From around the web