மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – துலாம்
துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
உடல்நலத்தில் கவனம் தேவை. மனக்கவலை அதிகரித்து காணப்படும். காரியங்களில் தடைகள் காணப்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும்.
வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றமடையும். பயிர்த் தொழில் நன்மை தரும். கல்வியில் முன்னேற்றமுண்டாகும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும்.
காதல் விவகாரத்தில் மோதல்கள் உண்டாகும். பங்குச் சந்தை நன்மை தராது. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்வியில் பின்னடைவு உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தராது. ஒப்பந்தக்காரர்கள் பிரச்சினையைச் சந்திக்க நேரிடும். சில பணவரவுகள் தாமதமாகும். நண்பர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும்.
நன்மை தரும் நாட்கள்: 15, 17, 20
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)