மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – மேஷம்
மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
உடல்நலம் முன்னேற்றமடையும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும்.
கூட்டு வியாபாரம் நன்மை தராது. எதிர்பாராத பணவிரயம் உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பிரயாணமும் இடமாற்றமும் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும்.
பங்குச் சந்தை லாபம் தரும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். முதலீடுகள் லாபம் தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 16, 17, 19
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)