வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை பாதுகாக்க வருகிறது ‘அம்மா கோவிட் ஹோம் கேர்’ திட்டம்!தமிழக அரசு அதிரடி!

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. பாதிப்பின் அளவைப் பொறுத்து மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்றனர். லேசான மற்றும் மிதமான பாதிப்பில் உள்ளவர்கள் அவர்களின் உடல் நிலைக்கு ஏற்ப மருத்துவமனைகள் மற்றும் கண்காணிப்பு மையங்களில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அறிகுறிகள் எதுவும் இல்லாமலும், லேசான அறிகுறிகளுடனும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு ‘அம்மா கோவிட் ஹோம்
 

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை பாதுகாக்க வருகிறது ‘அம்மா கோவிட் ஹோம் கேர்’ திட்டம்!தமிழக அரசு அதிரடி!

மிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. பாதிப்பின் அளவைப் பொறுத்து மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

லேசான மற்றும் மிதமான பாதிப்பில் உள்ளவர்கள் அவர்களின் உடல் நிலைக்கு ஏற்ப மருத்துவமனைகள் மற்றும் கண்காணிப்பு மையங்களில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அறிகுறிகள் எதுவும் இல்லாமலும், லேசான அறிகுறிகளுடனும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு ‘அம்மா கோவிட் ஹோம் கேர்’ என்ற புதிய திட்டத்தை வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுபவர்களுக்காக செயல்படுத்தப்பட இருக்கிறது.

அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டத்தில், வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சை மற்றும் மருத்துவக் கண்காணிப்புக்கான சிறப்பு பெட்டகம் ஒன்று வழங்கப்படும்.

அதில் உடலில் உள்ள ஆக்சிஜன் அளவு மற்றும் இதயத் துடிப்பைக் கண்டறிவதற்கான பல்ஸ் ஆக்ஸி மீட்டர், வெப்ப நிலையை அறியும் டிஜிட்டல் தெர்மா மீட்டர் இருக்கும். மேலும் 14 நாட்களுக்குத் தேவையான வைட்டமின் சி, இரும்பு சத்து மாத்திரைகள் , வைட்டமின் டி மாத்திரைகள், கபசுரக் குடிநீர், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அதிமதுரப் பொடி, உடல் வலிமையை மேம்படுத்தும் அமுக்ரா மாத்திரைகள், 14 முகக் கவசங்கள்,கைகழுவ சோப்பு ஆகியவை அடங்கியிருக்கும்.

இத்துடன் நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அடங்கிய கையேடும் வைக்கப்பட்டிருக்கும். மேலும் முழு உடல் பரிசோதனை மைய அலுவலர்கள் தினமும் பாதிக்கப்பட்டவர்களுடன் வீடியோ காலில் பேசுவார்கள்.

மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்களும் காணொலி முறையில் உடல் நிலையையும், உளவியல் நிலையையும் பரிசோதிப்பார்கள். தமிழக அரசின் இந்த திட்டத்தின் மூலம் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் நோயாளிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இந்த திட்டம் முதல்கட்டமாக சென்னையிலும் படிப்படியாக மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web