3 நாட்களாக லிப்ட்டில் சிக்கித் தவித்த இளம்பெண்.. தபால் கொடுக்க சென்ற போது பலியான சோகம்!

 
Uzbekistan

உஸ்பெகிஸ்தானில் அடுக்குமாடி குடியிருப்புக்கு தபால் கொடுக்கச்சென்ற இளம்பெண் 3 நாட்களாக லிப்ட்டில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் மாகாணத்தை சேர்ந்தவர் ஓல்கா லியோன்டிவா. இவர் கடந்த ஜூலை 24-ம் தேதி காணாமல் போயுள்ளார். பணிக்கு சென்ற அவர் வீடு திரும்பாததால் அச்சமடைந்த அவரது பெற்றோர் போலீசாரிடம் தகவல் அளித்தனர்.

Lift

இந்த நிலையில் 3 நாட்களுக்கு பின்னர் லியோன்டிவாவை போலீசார் சடலமாக மீட்டுள்ளனர். ஜூலை 24-ம் தேதியன்று லியோன்டிவா 9 மாடி கட்டிடத்தில் உள்ள லிப்ட்டில் ஏறியுள்ளார். எதிர்பாராத விதமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் லிப்ட் பாதியிலேயே நின்றுள்ளது. அதற்குள் சிக்கிய நிலையில், லியோன்டிவா கத்தி கூச்சலிட்டுள்ளார். இருப்பினும் வெளியில் இருந்து அவருக்கு உதவி கிடைக்கவில்லை.

மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட லியோன்டிவாவால் 3 நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் லிப்டுக்கு உள்ளேயே உயிரிழந்துள்ளார். அவருக்கு 6 வயதில் மகள் உள்ளார். இது தொடர்பாக சீனாவை சேர்ந்த லிப்ட் நிறுவனத்தின் மீது போலீஸ் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மனதை பதைபதைக்கும் வகையில் லிப்ட்டில் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

dead-body

இதேபோன்று கடந்த 26-ம் தேதி இத்தாலியில 61 வயதான பெண் ஒருவர் மின்தடை ஏற்பட்டதால் லிப்டில் சிக்கி உயிரிழந்தார். 2 மாடிக்கு இடையே மாட்டிக் கொண்டு அவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

From around the web